Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
[10 - May - 2008] [Font Size - A - A - A]
* எகிப்திலிருந்து வருகை; சாதகமான அறிகுறி என்கிறார் பௌசி

நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே எண்ணெய் வேட்டை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மன்னார் குடா கடலுடன் இணைந்த நீரோட்டப் பகுதியிலேயே சிலாபமும் உள்ளது. மன்னார் குடாவிலேயே எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவிருந்தன. இந்நிலையில் சிலாபப் பகுதியில் வாயு வெளியேற்றத்தை கண்டறிந்தபின் அங்கு எண்ணெய் வளம் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்வதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளுக்கு எகிப்திடமிருந்து தொழில்நுட்ப ஆதரவு பெறப்பட்டிருப்பதாக அமைச்சர் பௌசி கூறினார்.

`சிலாபத்தின் கரைப் பகுதியில் பெற்றோலிய வளம் இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டறிந்துள்ளோம். அதனையடுத்து எகிப்திடமிருந்து உதவி கோரிப் பெற்றிருக்கிறோம்' என்றும் பௌசி கூறியுள்ளார்.

எகிப்து 3 தொழில்நுட்ப நிபுணர்களை சிலாபம் பகுதிக்கு அனுப்பியிருக்கிறது. எகிப்தின் எண்ணெய் வளத்துறை அமைச்சைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிலாபம் பகுதிக்குச் சென்று எண்ணெய் ஆய்வு ஆரம்பக்கட்டப் பணிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அடுத்த ஓரிரு வாரங்களில் பணிகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பாக அவர்கள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக பௌசி கூறினார்.

தற்செயலான வாயு வெளியேற்றமானது பெற்றோலிய வளமிருப்பதற்கான அறிகுறியா என்பதைக் கண்டறிய அதிகளவிலான ஆய்வுகள் தேவைப்படுவதாக வருகை தந்துள்ள எகிப்திய நிபுணர்களில் ஒருவரான ஹனி நாசர் என்பவர் கூறினார்.

மன்னார் குடாவையொத்த நிலவமைப்பே காணப்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயமாகத் தோன்றுகின்றதெனவும் தனது பக்கத்தில் இந்தியா ஏற்கனவே எண்ணெய், வாயு அகழ்வுப் பணியை மேற்கொண்டிருப்பதாகவும் நாசர் தெரிவித்தார்.

ஆரம்பக் கட்ட அறிகுறிகள் சாதகமாக இருக்கின்றன என்றும் இலங்கையின் எண்ணெய் அகழ்வாய்புப் பணிக்கு உதவுவதில் எகிப்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார். அதேசமயம், நிலத்தின் கீழான நீர்த்தேக்கத்திலிருந்தும் வாயு வெளியேற்றத்துக்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2007 நவம்பரில் 50 அடி ஆழத்தில் குழாய்க்கிணறை சிலாபம் பகுதிவாசிகள் தோண்டியபோது வாயு வெளியேற்றம் கண்டறியப்பட்டதாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் தலைவரான நீல் டி சில்வா தெரிவித்தார்.

நீரூடாக வெளியேறிய வாயுக் குழாய் மூலம் வெளியே வந்ததாகவும் 5 மாதங்களாக அந்த வாயு எரிந்துகொண்டிருந்ததாகவும் அவர் கூறியதுடன் அந்த வாயு மெதேன் ரகத்தைச் சேர்ந்ததெனவும் அவர் குறிப்பிட்டார். மெதேன் வாயு இருக்கும் பகுதிகளில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இது உற்சாகமளிக்கும் அறிகுறி என்றும் நீல் டி சில்வா கூறினார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை இனமோதலுக்கு போர் மூலம் தீர்வு இல்லை
நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
தேர்தல் கண்காணிப்பு குழுவில் அரசதரப்பினரின் பிரசன்னத்துக்கு ஹக்கீம் கடும் ஆட்சேபனை
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
சமூக சேவையாளர் சுட்டுக் கொலை
கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை பராமரிக்க 36 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவை
அடம்பனை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
தாதியர் தொழிற்சங்க போராட்டத்தால் மேலும் 3 குழந்தைகள் மரணம்
படையினரின் தாக்குதலைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு
திருமலை மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறும் சாத்தியம்
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலி
தேர்தலுக்கு பின்னரும் அனைவருக்கும் மதிப்பளியுங்கள் ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்
அடியார்களின் தேவைகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் அனுமதி
காவத்தையில் 250 பேர் சிக்குன்குன்யாவால் பாதிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்கு 28 ஆயிரம் பொலிஸார் விசேடமாக நியமிப்பு
நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்
சபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தத்தையடுத்து நகைச்சுவையான விடயங்களை கூறுகின்றார் ரணில்
அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை
கிழக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
அரசும் முப்படையினரும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு மோசடி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கிழக்கு வாக்காளரிடம் ஜே.வி.பி. வேண்டுகோள்
லெபனானிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கையர்களுக்கு தற்காலிகத் தடை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் இருநாள் விசாரணைகளின் பின்னர் விடுதலை
புத்தளம், மட்டக்குளியில் இரு தமிழர் கடத்தல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறையீடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையுடனேயே ரணில் செயற்படுகின்றார்
பஸ்ஸில் தமிழ் இளைஞர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளியில் ஒருவர் கைது
கொட்டகலைப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
சகல மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை ஐ.தே.க.உருவாக்கும்
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கான ஊடகவியலாளர் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
கல்முனை வலய மாணவர்கள் கல்வித்தரத்தில் சிறந்த பெறுபேறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன உரும்பிராய் இளைஞர்
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க எமக்கு வாக்களியுங்கள்
சர்வதேச வலைப்பின்னலினூடாக ஆங்கில பாட கற்கை நெறி ஆரம்பம்
கிழக்கில் யானையை கூலிக்கு விட்டுள்ளார் ஐ.தே.க.தலைவர்
மாகாண சபை தேர்தல் முடிவுகளே கிழக்கின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மக்கள் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை வங்கி முடிவு
`மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு திறமையே மூலதனமென எண்ணிச் செயற்பட வேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com