Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
[10 - May - 2008] [Font Size - A - A - A]
* இலங்கைக்கு நாடுகடத்தப்படலாம்?

பிரிட்டனில் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி நிறைவுற்ற நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டு கருணா குடிவரவுத்துறையின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பி.பி.சி.செய்தி சேவையில் தெரிவிக்கப்பட்டதாவது;

கருணா இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன் போர்க்குற்றங்களை இழைத்தாரென அவர் மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்ததுடன் அவை தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரச வழக்குத் தொடுப்புத்துறை கருணா மீது மேலும், எந்தவொரு வழக்கையும் தொடுத்து தண்டனை பெற்றுத்தருமளவிற்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளை பெற்றுத்தரும் போதிய ஆதாரங்கள் இல்லையென்று லண்டன் பொலிசாரிற்கு கூறியுள்ளது.

இந்நிலையில் கருணாவை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் வாய்ப்புகள் அதிகமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கருணா சார்பில் ஆஜரான பிரிட்டன் சட்டத்தரணி டேவிட் பிலிப் தெரிவிக்கையில்;

எனக்குத் தெரிந்த வரை கருணா தனது தண்டனைக் காலத்தை சிறையில் அனுபவித்துவிட்டார். எனவே அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டாரென்பதுதான் அதன் அர்த்தம்.

ஆனால் அவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்படுவதற்காக தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், பிரிட்டனின் விசா பெற்றுக் கொள்வது தொடர்பாக அவரேதான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, கருணாமீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுகளையும் ஊடகங்கள் மூலம் தான் நான் அறிந்துள்ளேன். இது வரை அவராக அவற்றைப் பற்றி கூறியதில்லையெனத் தெரிவித்தார்.

மேலும், கருணாமீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமிடத்து அவரது குற்றங்களை நேரில் கண்டவர் யார், கருணாவுக்கு எதிராக சாட்சி சொல்வார்களாவென்பது மற்றுமொரு சிக்கலுக்குரிய விடயமாகும்.

கருணா மீது வழக்குத் தொடரப்பட வேண்டுமானால் அவர் அரச சார்பான ஊழியராக இருத்தல் வேண்டும் அல்லது பிரிட்டன் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

இதன் காரணமாக 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் அரசுக்கு எதிரான குழு ஒன்றில் இருந்தமையால் அக்காலப்பகுதிக்குரிய குற்றங்கள் மீது வழக்குத் தொடரமுடியாது.

பிரிட்டன் அரசின் இம்முடிவு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட அறிக்கையில்;

சர்வதேச சட்டப்படி பிரிட்டன், கருணா, சித்திரவதை தொடர்பாகவும், பணயக்கைதிகளைக் கடத்தியமை, சிறார்களை போரில் இணைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் சாட்சியமளிக்க வாய்ப்பளித்தவர்களிடமும் பிரிட்டன் இந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்குத் தனக்கு உரிமை உள்ளது என்பதை பிரிட்டனரசு தெளிவுபடுத்தவில்லை.

கருணா மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் வரை நிரபராதி என்றே கருதப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
இலங்கை இனமோதலுக்கு போர் மூலம் தீர்வு இல்லை
நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
தேர்தல் கண்காணிப்பு குழுவில் அரசதரப்பினரின் பிரசன்னத்துக்கு ஹக்கீம் கடும் ஆட்சேபனை
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
சமூக சேவையாளர் சுட்டுக் கொலை
கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை பராமரிக்க 36 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவை
அடம்பனை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
தாதியர் தொழிற்சங்க போராட்டத்தால் மேலும் 3 குழந்தைகள் மரணம்
படையினரின் தாக்குதலைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு
திருமலை மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறும் சாத்தியம்
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலி
தேர்தலுக்கு பின்னரும் அனைவருக்கும் மதிப்பளியுங்கள் ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்
அடியார்களின் தேவைகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் அனுமதி
காவத்தையில் 250 பேர் சிக்குன்குன்யாவால் பாதிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்கு 28 ஆயிரம் பொலிஸார் விசேடமாக நியமிப்பு
நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்
சபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தத்தையடுத்து நகைச்சுவையான விடயங்களை கூறுகின்றார் ரணில்
அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை
கிழக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
அரசும் முப்படையினரும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு மோசடி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கிழக்கு வாக்காளரிடம் ஜே.வி.பி. வேண்டுகோள்
லெபனானிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கையர்களுக்கு தற்காலிகத் தடை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் இருநாள் விசாரணைகளின் பின்னர் விடுதலை
புத்தளம், மட்டக்குளியில் இரு தமிழர் கடத்தல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறையீடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையுடனேயே ரணில் செயற்படுகின்றார்
பஸ்ஸில் தமிழ் இளைஞர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளியில் ஒருவர் கைது
கொட்டகலைப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
சகல மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை ஐ.தே.க.உருவாக்கும்
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கான ஊடகவியலாளர் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
கல்முனை வலய மாணவர்கள் கல்வித்தரத்தில் சிறந்த பெறுபேறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன உரும்பிராய் இளைஞர்
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க எமக்கு வாக்களியுங்கள்
சர்வதேச வலைப்பின்னலினூடாக ஆங்கில பாட கற்கை நெறி ஆரம்பம்
கிழக்கில் யானையை கூலிக்கு விட்டுள்ளார் ஐ.தே.க.தலைவர்
மாகாண சபை தேர்தல் முடிவுகளே கிழக்கின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மக்கள் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை வங்கி முடிவு
`மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு திறமையே மூலதனமென எண்ணிச் செயற்பட வேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com