லண்டன் : இந்தியாவில் பிறந்த மஞ்சுளா சூட் பிரிட்டனின் லிசெஸ்டர் நகர மேயராகப் பதவியேற்கிறார். ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிட்டனில் மேயராகப் பதவியேற்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1970 ஆம் ஆண்டு இவர் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். மேயராகப் பதவியேற்பது குறித்து அவர் கூறியது; பிரிட்டனின் மேயர் பதவி வகிப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நகர மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றுவேன். இது எனக்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்றார்.
வரும் 15 ஆம் திகதி அவர் மேயராகப் பதவியேற்கவுள்ளார்.