Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதியமைச்சர் பாயிஸ் படையினரால் மீட்பு
[11 - May - 2008] [Font Size - A - A - A]
மூதூரில் கால்நடை வள பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் தாக்குதல் நடத்த முயன்றவேளை விஷேட அதிரடிப் படையினர் தலையிட்டு அவரை மீட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே பிரதியமைச்சர் பாயிஸ் அங்கு சென்றிருந்தார்.

இவ்வேளையில் பிரதியமைச்சர் பாயிஸ் மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தியதையடுத்து மாலை 6.45 மணியளவில் பிரதியமைச்சர் பாயிஸ் ஒளிந்திருந்த வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன் அவரை வெளியே வருமாறும் கோஷமிட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களினால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

நிலைமை மேலும் மோசமடையவே அங்கு விஷேட அதிரடிப் படையினர் விரைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற விஷேட அதிரடிப் படையினர் பிரதியமைச்சர் பாயிஸை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இவ்வேளை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பாயிஸுக்கு எதிராக கோஷமிட்டதுடன் மேலும் சிலர் அவர்களை தாக்கவும் முயன்றுள்ளனர்.

எனினும் அங்கிருந்து பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட போதும் பின்னர் அமைதி நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாயிஸ் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Email this page Your Opinion Print this page
திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
மோசடி இடம்பெற்ற பகுதிகளில் மீள்வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தல்
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதியமைச்சர் பாயிஸ் படையினரால் மீட்பு
கருணா விடயத்தில் பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டது பிரிட்டன்
அம்பாறை பக்கிமிட்டியா, பன்னலகம பகுதி இராணுவ நிலைகள் மீது மோட்டார் தாக்குதல்
தேர்தல் வரலாற்றிலேயே மோசமான முறைகேடுகள் தென்னிலங்கையிலிருந்து கைக்கூலிகளும் வரவழைப்பு
ஜனநாயக உரிமைகளுக்கு வரலாற்றில் மீண்டுமொருதடவை களங்கம் ஏற்பட்டுள்ளது
வீரகெட்டிய பிரதேச சபை உபதலைவர் சுட்டுக்கொலை
அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தேர்தல் களம் செல்ல அனுமதி இல்லை
படையினரின் ஐந்து சடலங்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளால் ஒப்படைப்பு
மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவி வழங்குமாறு வேண்டுகோள்
வன்முறை அதிகரிப்பால் வாக்களிக்க மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை
திருமலை உள்துறைமுக வீதியில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம்
மோசமான வன்முறைகள், பெரும் மோசடிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
வாக்களிப்புக்கு முன்னர் 88 வன்செயல்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்
பெரும் பதற்றத்தின் மத்தியில் மட்டு மாவட்டத்தில் வாக்களிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com