Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மோசடி இடம்பெற்ற பகுதிகளில் மீள்வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தல்
[11 - May - 2008] [Font Size - A - A - A]
தேர்தல் மோசடி நடைபெற்ற வாக்களிப்பு நிலையங்களின் வாக்கு எண்ணும் பணியை உடனடியாக இடைநிறுத்தி அங்கு மீள் வாக்களிப்பை நடத்துமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு தேர்தல் வாக்களிப்பில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் வன்முறைகளை ஆதாரத்துடன் அந்நிலையம் அம்பலப்படுத்தியிருக்கும் அதேவேளை, இதுபற்றி கருத்து தெரிவித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில்;

வாக்களிப்பில் மிகப்பாரதூரமான மோசடிச் சம்பவங்களும், வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை இரத்துச்செய்து, அங்கு மீள் வாக்குப்பதிவை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

வன்முறையற்ற, மோசடியற்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் மோசடிகளும், வன்முறைகளும் மிக அதிகளவில் நடைபெற்றுள்ளமை துரதிர்ஷ்டவசமானது.

கொலை, காயப்படுத்துதல், அச்சுறுத்தல், கட்சி முகவர் பலாத்கார வெளியேற்றம், வாக்குத் திணிப்பு, வாக்கு அட்டைப் பறிப்பு ஆகியனவும் நடைபெற்றுள்ளன.

தம்பிலுவில் மத்திய கல்லூரி, தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், ஆகியவற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இவை உதாரணங்கள் மாத்திரமே.

பல அமைச்சர்களுக்கு மோசடிகளுடனும், வன்முறைகளுடனும் நேரடித் தொடர்புள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. என்றார் அத்துடன் இது பற்றிய விரிவான அறிக்கையை தயார் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
மோசடி இடம்பெற்ற பகுதிகளில் மீள்வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தல்
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதியமைச்சர் பாயிஸ் படையினரால் மீட்பு
கருணா விடயத்தில் பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டது பிரிட்டன்
அம்பாறை பக்கிமிட்டியா, பன்னலகம பகுதி இராணுவ நிலைகள் மீது மோட்டார் தாக்குதல்
தேர்தல் வரலாற்றிலேயே மோசமான முறைகேடுகள் தென்னிலங்கையிலிருந்து கைக்கூலிகளும் வரவழைப்பு
ஜனநாயக உரிமைகளுக்கு வரலாற்றில் மீண்டுமொருதடவை களங்கம் ஏற்பட்டுள்ளது
வீரகெட்டிய பிரதேச சபை உபதலைவர் சுட்டுக்கொலை
அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தேர்தல் களம் செல்ல அனுமதி இல்லை
படையினரின் ஐந்து சடலங்கள் நேற்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளால் ஒப்படைப்பு
மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவி வழங்குமாறு வேண்டுகோள்
வன்முறை அதிகரிப்பால் வாக்களிக்க மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை
திருமலை உள்துறைமுக வீதியில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலகம்
மோசமான வன்முறைகள், பெரும் மோசடிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு
வாக்களிப்புக்கு முன்னர் 88 வன்செயல்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்
பெரும் பதற்றத்தின் மத்தியில் மட்டு மாவட்டத்தில் வாக்களிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com