Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இலங்கையிலும் மாலைதீவிலும் தெற்காசிய உதைபந்தாட்டப் போட்டிகள்
[11 - May - 2008] [Font Size - A - A - A]
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி அடுத்தமாதம் 3 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையிலும் மாலைதீவிலும் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் மொத்தம் 8 நாடுகள் பங்குபற்றுகின்றன. இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.

ஏ- பிரிவில் : இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம் அணிகளும்

பி- பிரிவில்: இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் , ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்குபற்றுகின்றன.

ஏ- பிரிவு ஆட்டங்கள் மாலைதீவிலும் பி- பிரிவு ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும்.

இப்போட்டியின் ஆரம்ப வைபவம் மாலைதீவிலும் இறுதி வைபவம் கொழும்பிலும் நடைபெறும்.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி மாலைதீவின் தலைநகரில் ஆரம்பமாகும் 1 ஆவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நேபாள அணியும் 2 ஆவது போட்டியில் மாலைதீவு அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும் போட்டியிடும்.

4 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகும் பி- பிரிவின் 1 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து பூட்டான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும் போட்டியிடும்.

5 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் மாலைதீவு அணியை எதிர்த்து நேபாள அணியும் போட்டியிடும்.

6 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து பூட்டான் அணியும் போட்டியிடும்.

7 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நேபாள அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து மாலைதீவு அணியும் போட்டியிடும்.

8 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பூட்டான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணியும் போட்டியிடும்.

மேற்படி இரு பிரிவு அணிகளிடையே நடைபெறும் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 1 ஆம், 2 ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கிடையிலான அரை இறுதி ஆட்டங்கள் 13 ஆம் திகதி மாலைதீவிலும் 14 ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறும்.இறுதி ஆட்டம் 14 ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறும் .

Email this page Your Opinion Print this page
யாழ்., வவுனியா, திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு தங்கப்பதக்கங்கள்
தமிழக கரப்பந்தாட்ட அணி வெற்றி
புதிய இந்திய ஹொக்கி நிர்வாகத்தில் முன்னாள் வீரர்கள் அங்கம்
இலங்கையிலும் மாலைதீவிலும் தெற்காசிய உதைபந்தாட்டப் போட்டிகள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com