தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி அடுத்தமாதம் 3 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையிலும் மாலைதீவிலும் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் மொத்தம் 8 நாடுகள் பங்குபற்றுகின்றன. இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
ஏ- பிரிவில் : இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம் அணிகளும்
பி- பிரிவில்: இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் , ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்குபற்றுகின்றன.
ஏ- பிரிவு ஆட்டங்கள் மாலைதீவிலும் பி- பிரிவு ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும்.
இப்போட்டியின் ஆரம்ப வைபவம் மாலைதீவிலும் இறுதி வைபவம் கொழும்பிலும் நடைபெறும்.
அடுத்த மாதம் 3 ஆம் திகதி மாலைதீவின் தலைநகரில் ஆரம்பமாகும் 1 ஆவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நேபாள அணியும் 2 ஆவது போட்டியில் மாலைதீவு அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும் போட்டியிடும்.
4 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகும் பி- பிரிவின் 1 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து பூட்டான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும் போட்டியிடும்.
5 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் மாலைதீவு அணியை எதிர்த்து நேபாள அணியும் போட்டியிடும்.
6 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து பூட்டான் அணியும் போட்டியிடும்.
7 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நேபாள அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து மாலைதீவு அணியும் போட்டியிடும்.
8 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பூட்டான் அணியும் 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணியும் போட்டியிடும்.
மேற்படி இரு பிரிவு அணிகளிடையே நடைபெறும் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 1 ஆம், 2 ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கிடையிலான அரை இறுதி ஆட்டங்கள் 13 ஆம் திகதி மாலைதீவிலும் 14 ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறும்.இறுதி ஆட்டம் 14 ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறும் .