அட்டன் பிராந்திய ஊடகவியலாளர் எஸ். ஷ்ரீதரனின் ஊடக சாதனங்களை இனந்தெரியாத குழுவொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு களவாடிச் சென்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
ஊடகவியலாளர் எஸ்.ஸ்ரீதரன் நாவலப்பிட்டி சொய்சாகல பகுதியிலுள்ள தனது வீட்டில் நேற்றுமுன்தினமிரவு நித்திரையிலிருந்த போதே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டின் ஜன்னலில் மிக சூட்சகமாக திறந்து வீட்டினுள் புகுந்து Cனந்தெரியாத குழு ஊடகவியலாளரின் டிஜிட்டல் கமெரா, வொய்ஸ் ரெக்கோடர், கையடக்கத் தொலைபேசி, ரொக்கப்பணம் உட்பட மேலும் சில பொருட்களைக் களவாடிச் சென்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.