Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
[12 - May - 2008] [Font Size - A - A - A]
தோட்ட ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட தோட்ட மக்கள் சுமார் ஐநூறுபேர் நோய் வாய்ப்பட்ட நிலையில் பசறை, மெட்டிகாதன்ன அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விரலிபத்தனை - தொழிற்சாலை பிரிவில் அமைந்துள்ள ஷ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் உற்சவம் சனிக்கிழமை ஆரம்பமானபோது பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, மாலைஅடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உட்கொண்ட அனைவருமே திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்துள்ளனர்.

இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ரட்னாயக்கவிற்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மடுல்சீமையின் அனைத்து தனியார் வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு சென்ற இ.போ.ச. பஸ் ஆகியவற்றை சேவையில் ஈடுபடுத்தி பாதிப்படைந்தவர்களை மெட்டிகாதன்னை, பசறை அரசினர் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தார்.

பசறை அரசினர் மருத்துவமனையில் 300 பேரும் மெட்டிகாதன்னை அரசின் மருத்துவமனையில் 200 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி உட்கொண்ட உணவில் நச்சுத் தன்மையான பொருட்கள் கலந்திருந்தமையே, இவர்கள் நோய்வாய்ப்பட்டதற்கான காரணமாகுமென்று தெரிவித்தார்.

அத்துடன் ஆலய அன்னதான உணவின் ஒரு பகுதி தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆண், பெண் தோட்டத் தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் ஆகியோரே நோய்வாய்ப்பட்டிருப்பவர்களாவர். இவர்களில் ஒரு சிலர் சுகமாகி வருவதாகவும் பலர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவதினத்தன்று மாலை 5 மணியளவில் அன்னதானம் உட்கொண்டவர்கள் இரவு 9 மணியளவில் நோய்வாய்ப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மடுல்சீமை பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ரட்னாயக்க தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com