Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
[12 - May - 2008] [Font Size - A - A - A]
* `கபே' கடும் கண்டனம்

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த வகையிலும் சுதந்திரமானதும் நீதியானதுமாக உறுதிப்படுத்திச் சொல்லமுடியாதவாறு சட்டத்தின் உயரிய தன்மையினை மீறி வன்முறையின் உயரிய தன்மை வெற்றி பெற்றமை தெளிவான வாக்கு மோசடியாகுமென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கானமக்கள் இயக்கம் (CAFFE) தெரிவித்துள்ளது.

கிழக்குமாகாண சபைத் தேர்தல் வாக்களிப்புத் தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள இடைக்கால அறிக்ைகயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வாக்களர்களை வாக்குச்சாவடியில் இருந்து திருப்பியனுப்புதல், வாக்களிக்கக் கூடாது என அச்சுறுத்துதல் போன்ற நிகழ்வுகள் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளன.

வாக்குச்சாவடிப் பிரதிநிகளைத் தாக்குதல் அவர்களைத் திருப்பியனுப்புதல், வாக்குச்சாவடிகளுக்கு வருவதனைத் தடுத்தல், கடத்தல் அதிகரித்திருந்தன காலையில் வாக்குச்சாவடிக்கு வருகைதந்த பிரதிநிதிகள் அச்சுறுத்தலின் காரணமாகப் பகலுடன் திரும்பிச் சென்றதாக எமது கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் உத்தியோகத்தர்கனைத் தாக்குதல், அச்சுறுத்தல் என்பனவும் இதனுள் அடங்கும்.

தேர்தல் கண்காணிப்புக் கடமைக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியான தடைகள் வாழைச்சேனைப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரமிக்க உத்தியோகத்தர்களின் அறிவித்தல்களைக் கவனத்தில் எடுக்காமை சாதாரண நிகழ்வாக இருந்தது.

ஒழுங்குபடுத்தப்பட்ட காடையர் குழுக்கள் திகாமடுல்ல மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் எங்களின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தனர். இந்தக் குழு தேர்தலுக்கு முதல் நாள் இந்தப் பிரதேசங்களுக்கு வருகைதந்து தமது செயற்பாடுகளைத் திட்டமிட்டதோடு இதனைத் தடுப்பதற்கு முறையான செயற்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்புத் தரப்புக்கு முடியவில்லை. தெஹியத்தகண்டியப் பிரதேசத்தில் முழுமையான வன்முறையை ஏற்படுத்துவற்கு இந்தக்குழுவுக்கு முடியுமாகவிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினர் மீது இவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.

மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல இடங்கிளில் 14-15 வயதுப் பிள்ளைகள் சுதந்திரமாக கள்ளவாக்கிடுவதற்கான நடவடிக்கைகள், நிகழ்வுகள் பலவற்றை நாங்கள்கண்காணித்துள்ளோம். உண்மையான வாக்குச்சீட்டு மற்றும் அடையாள அட்டை உள்ள மற்றும் இல்லாமல் இச்செயற்பாடு நடைபெற்றது.

அரச இராணுவம் அல்லாத ஆயுதம் ஏந்திய பிரிவினர் தேர்தல் செயற்பாடுகளை வழிநடத்தியிருந்தமையை மட்டக்களப்பின் பல இடங்ளிலும் கல்முனையில் பல இடங்களிலும் நாங்கள் அவதானித்தோம். தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகைதரும் போது ஆயுதம் தாங்கிய பிரிவினர் சற்றுப் பின்வாங்கி மீண்டும் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டமையும் நடைபெற்றது.

இப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் மற்றும் விசேடமான அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலில் புத்தளம் இடம்பெயர்ந்தோர் முகாம் சிலவற்றிலிருந்து கொண்டுச் செல்லப்பட்ட பிரிவினர் திருகோணமலை வாக்களர்களைத் திருப்பியனுப்பிவிட்டு கள்ளவாக்களித்ததை எங்கள் குழுவினர் கண்காணித்துள்ளனர்.

இதற்குச் சமாந்தரமாக புலிகள் அமைப்பின் ஆயுதச் செயற்பாடுகள் மற்றும் குண்டு வெடிப்புக் காரணத்தினால் திகாமடுல்ல மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களர்கள் பயமுறுத்தல் செய்யப்பட்டுள்ளனர்

தேர்தல் தினம் காலை 7 மணிமுதல் மாலை 5.30 மணிவரை எமது பிரதான காரியாலயத்திற்குக் கிடைத்த தகவல்களில் உள்ள வன்முறைச் செயற்பாடுகள் / தேர்தல் சட்டத்தினைமீறுதல் தொடர்பான தரவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன. எங்கள் மாவட்ட இணைப்புக் காரியாலயத்தின் இறுதி அறிக்கை கிடைத்ததும் இது மேலும் அதிகிக்கும்.

மூன்று மாவட்டங்களிலும் வன்முறைச் செயற்பாடுகள் மற்றும் வாக்கு நடைபெற்ற வாக்களிப்பு நிலையங்களில் தேர்தலை இரத்துச் செய்து அந்தப்பிரதேசங்களில் மீண்டும் தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையாளரை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தல் ஆணையாளரின் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய வாக்குச்சாவடிகளால் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வெருகலில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி, கப்பல்துறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி,போரைத்தீவு, கொக்கடிச்சோலை, காத்தான்குடி, ஆரையம்பதைி பிரதேசத்திலுள்ள வாக்குச்சாவடிகள், மற்றும் திகாமடுல்ல மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வாக்குச்சாவடிகள் உள்ளன.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com