முகமாலையில் அண்மையில் நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகள் `சமாதானம்' எனப்படும் தமது தயாரிப்பு ஷெல்களை ஏவியிருந்தனர். இதனால், மணிக்கு 30 முதல் 40 பேரை இராணுவம் இழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ்சண்டே லீடர்ீ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
`சமாதானம்' என்னும் சொல்லை மிகவும் நகைச்சுவையாக, களத்தில் வீழ்ந்து வெடிக்கும் ஷெல்களுக்கு விடுதலைப்புலிகள் சூட்டியுள்ளனர். மோட்டார் குண்டுகள் மற்றும் வான் குண்டுகளுக்கு எல்லாம் புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஷெல்கள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற முகமாலைச் சமரிலும் அரசிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.
53 மற்றும் 55 ஆவது படையணிகள் விடுதலைப்புலிகளின் முன்னணி அரணை அடைந்தபோது விடுதலைப்புலிகள் தாக்குதலை ஆரம்பித்ததுடன், 82 மி.மீ., 152 மி.மீ, 130 மி.மீ ஷெல்களும் சரமாரியாக ஏவப்பட்டன. இந்தச் சமரில் விடுதலைப்புலிகள் 1,000 இற்கும் அதிகமான ஷெல்களை ஏவியிருந்தனர். இதனால், மணிக்கு 30 முதல் 40 பேரை இராணுவம் இழந்திருந்தது.
53 ஆவது படையணியே 80 விகிதமான இழப்பை சந்தித்திருந்தது. விடுதலைப்புலிகள் தமது பீரங்கிகளில் சிலவற்றை சோரன்பற்றுப் பகுதியில் வைத்து இயக்கியிருந்தனர். இந்தச் சமரில் பயன்படுத்திய தமது சொந்தத் தயாரிப்பு மோட்டார் குண்டுகளை விடுதலைப்புலிகள் படையினருக்கு அருகில் வைத்தே பயன்படுத்தியிருந்தனர்.
`சமாதானம்' ஷெல் 2 கி.மீ. தூரவீச்சுக் கொண்டது. சிலர் அதன் தூரம் மிகவும் அதிகமெனத் தெரிவித்துள்ளனர். எனினும், விடுதலைப்புலிகள் மிக அளவில் ஷெல்களைப் பயன்படுத்தியது அவர்கள் புதிதாக ஷெல்களைத் தருவித்துள்ளதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
`சமாதானம்' ஷெல்கள் விடுதலைப்புலிகளின் மூன்றாம் தலைமுறை ஷெல்களாகும்.
விடுதலைப்புலிகள் ஷெல்களை உருவாக்கும் தமது முயற்சியை 1980 களில் ஆரம்பித்திருந்ததாக ஆய்வாளர் றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஷெல்களின் பெயர் `பாபா'. 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் `பசீலன் - 2000'ஷெல்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருந்தனர். விடுதலைப்புலிகளின் ஆயுத ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட `பசீலன் - 2000' மோட்டார் 25 கி.கி. நிறையுடைய 1 கி.மீ. தூரத்திற்கு வீசத்தக்கது.
விடுதலைப்புலிகளின் இந்த தொழில்நுட்பப் பிரிவை குட்டிசிறி, மணி, ஒலிவர் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்களை ராஜூ வழிநடத்தி வந்தார். வடமராட்சியில் வல்லிபுரம் பகுதியிலேயே இந்த ஷெல்கள் முதலில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.
இரண்டாவது சோதனை வட்டுக்கோட்டை வயல் வெளியில் நடத்தப்பட்டது. எனினும், அது வெற்றிபெறவில்லை.
மூன்றாவது சோதனை கீரிமலைப் பகுதியில் நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றிருந்தது. இந்த சோதனைகளை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீடியோவில் பார்வையிட்டிருந்தார். அதற்கு லெப். கேணல் குட்டிசிறி பொறுப்பு வகித்திருந்தார்.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ். கோட்டை முற்றுகையில் விடுதலைப்புலிகள் அதனைப் பயன்படுத்தியிருந்தனர். பின்னர் பலாலி தளம் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர். ்`பசீலன் - 2000' ஷெல் செலுத்திகளை விடுதலைப்புலிகள் உழவு இயந்திரத்தில் பொருத்திப் பயன்படுத்தியிருந்தனர்.
படையினர் தமது ஷெல் செலுத்திகளைக் கண்டறிவதைத் தவிர்க்கும் முகமாக விடுதலைப்புலிகள் ஆட்லறிப் பீரங்கிகளைக் கூட வாகனங்களில் பொருத்தியே பயன்படுத்தியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.