இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் மூன்றாவது மரணம் கொடக்கவெலயில் இடம்பெற்றுள்ளதாக இரத்தினபுரி பிரதேச சுகாதார சேவை வைத்தியர் அதுல தங்கல்ல தெரிவித்தார்.
கொடக்கவெல கவுடுவாவவை வசிப்பிடமாகக் கொண்ட கே. ஹயதிஸ்ஸ (வயது 60) என்பவரே எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கொடக்கவெல பிரதேசத்தில் ஏற்பட்ட இம்மரணத்தால் இப்பகுதியில் எலிக்காய்ச்சல் பரவிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் எம்பிலிப்பிட்டி எகலிய கொடை ஆகிய பிரதேசங்களில் எலிக்காய்ச்சலில் பீடிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
வயல் பகுதிகளை அண்மித்த இடங்களிலே இக் காய்ச்சல் பரவி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடக்கவெல பிரதேசத்தில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை அறிவுறுத்தும் கூட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கொடக்கவெல சுகாதர பரிசோதகர் தெரிவிக்கின்றார்.
வயல் வெளிக்கு அண்மித்த இடங்களில் வசிப்பவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் எலிகள் இருக்கும் இடங்களில் அழித்துவிடுமாறும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.