இரத்தினபுரி அரச வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்று வந்த வேலை நிறுத்தத்தின்போது இங்கு இடம்பெற்ற 3 மரணங்களும் தாதிகளின் வேலைநிறுத்தம் அல்லது அலட்சியப் போக்கின் காரணமாக இடம்பெற்றதா, இல்லையா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதுடன் இது தொடர்பாக சட்டமா அதிபருக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சிலிருந்து இரத்தினபுரி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் இவ் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன், குறிப்பிட்டவாறு மேற்படி 3 நோயாளர்களும் தாதிகளின் அலட்சியப் போக்கினால் இறந்திருந்தால் தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று விசாரணைகளிலீடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைகளின் அறிக்கைகள் சட்டமா அதிபருக்கும், சுகாதார அமைச்சரினால் அனுப்பி வைக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.