வட்டுக்கோட்டை கிழக்கு சித்தன்கேணியிலுள்ள வீடொன்றில் பட்டப்பகல் வேளை ஓடு பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களைத் திருடிக் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை பட்டப்பகல் நேரம் இடம் பெற்ற இத்திருட்டுக் குறித்து மேலும் தெரிய வருவதாவது;
அரச பணியாளர்களான வீட்டின் உரிமையாளர்கள் பணிக்குச் சென்ற பின் சமயம் பார்த்து வீட்டில் நுழைந்த திருடர்கள் வீட்டின் கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி அங்கிருந்த அலுமாரி மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை உடைதெறிந்து நகை, பணம், ரேப்-ரேக்கோடர், டெக் மற்றும் இரு கையடக்கத் தொலைபேசி போன்ற பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.