தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி நடந்த கான்பூர் மைதானத்தின் ஆடுகளம் மோசமாகத் தயார் செய்யப்பட்டிருந்தது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இந்திய கிரிக்கெட் சபை மன்னிப்புக் கோரியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் நடந்த கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததால் இந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிவடைந்தது. இந்த ஆடுகளத்தின் தரம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபை இதுகுறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஆடுகளங்களை தயார் செய்யாமலிருக்க வேண்டுமென்று கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் சபை இந்தத் தவறு மீண்டும் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.