நயினாதீவின் பிரதானவீதி, மகாவித்தியாலய வீதி, விநாயகர் வீதி ஆகியன 14 வருடங்களாக எந்தவித புனரமைப்பு வேலைகளும் இடம்பெறாமல் குன்றும் குழியுமாகவுள்ளன.
நயினாதீவு இறங்குதுறையில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும் இவ்வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பராமரித்து வருகின்றபோதும் கடந்த 14 வருடங்களாக இவ்வீதிகளுக்கு புனரமைப்புக்கு நிதி வழங்கப்படாமையால் மோசமான நிலையில் இவ்வீதி காணப்படுகின்றது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஷ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் , கௌதம புத்தர் வழிபாடு நடாத்திய நயினாதீவு ஷ்ரீ நாகவிகாரை நயினாதீவு வைத்தியசாலை, நயினாதீவு மகாவித்தியாலயம் என்பனவும் சகல திணைக்களும் உப அலுவலகங்கள் இவ்வீதிகளில் தான் அமைந்துள்ளன.
மக்கள் இவ்வீதியால் தான் சகல அன்றாடப் பணிகளையும் நிறைவு செய்வதால் போக்குவரத்துச் செய்யும்போது பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இம்மக்களின் அன்றாடப் பிரச்சினையான வீதிப்போக்குவரத்தை சீர்செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளது பாரிய பொறுப்பல்லவா?