Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
[13 - May - 2008] [Font Size - A - A - A]
* யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர்

`பணம் இருந்தால் வாழலாம். குடும்ப கௌரவம் அந்தஸ்து இருந்தால் வாழலாம் என்ற நிலை இன்றில்லை. இன்று உலகம் அறிவுசார் பொருளாதாரத்தில் உயர்ந்து செல்வதால் அறிவிருந்தால் தான் வாழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவு மேம்பட வேண்டுமானால் பகுத்தறிவையும் இணைத்து கல்வியில் முன்னேற வேண்டும். வாசிப்பு மனிதனை அனைத்துத் தேடல்களுக்கும் மைய வட்டமாக இருப்பதால் வாசிப்புப் பழக்கம் வகுப்பறையிலேயே ஆரம்பமாக வேண்டும்'.

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நூலக விழிப்புணர்வு நிறுவனமும், யாழ்ப்பாண மாநகர சபையும் இணைந்து நூலக வாசிப்புத் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாண பொதுநூலக நூலகர் எஸ்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தொடர்ந்து பேசுகையில், "நான் பாடசாலை நாட்களில் நிறைய வாசிப்பேன். அது இன்றுவரை முடிவடையவில்லை. இதன் காரணமாக நான் அடைந்துள்ள உயர்வுக்கு அது வழி காட்டியாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நூலகம் அவசியம்.

வீட்டில் சில பாவனைப் பொருட்களை தேடி அலுமாரிகளில் காட்சிக்கு வைப்பதைவிட நல்ல நூல்களை வாங்கி அதைப்படித்து பயன்படுத்தி பாதுகாப்பது பெரும் செல்வமாகும். அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் கற்பது போல் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்.

இன்று நடைபெறுவது மாணவர்களின் எதிர்காலம் நல்ல முறையில் அமைவதற்காக வாசிப்புப் பழக்கத்தில் அவர்களை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாகும். அதற்காக நல்ல நூல்களைத் தேடி வாசியுங்கள் என அறிவுறுத்துவதாகும். நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் பிறந்த தினங்களுக்கு பரிசுகள் அன்பளிப்பதைவிட நூல்களை அன்பளிப்பு செய்வது பலரை அறிவு ஜீவிகளாக உருவாக்க உதவுகிறீர்கள். அறிவே செல்வம். கல்வியை யாரும் அழித்து விட முடியாது.

இளமையில் நாம் கற்கும் கல்வி தான் முதுமையிலும் எம்மை வழிநடாத்துகிறது. நிறைய வாசியுங்கள். வாசித்ததை பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள். நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என வேண்டுகிறேன் என்றார்.

வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தமதுரையில், முன்னைய காலங்களில் பாடசாலை மாணவர்கள் வீட்டில் இருந்து நூல்களை எடுத்து வந்து வகுப்பறைகளில் களவாகப் படிக்கும் பழக்கமிருந்தது. ஆசிரியர்களைக் கண்டால் ஒழித்து விடுவதுமுண்டு. இன்று ஆசிரியர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. வாசிப்புப் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து விட்டதால் அதனை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய பணி ஆசிரியர்களிடமே சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் பாடசாலைகளில் நூலகங்களை அமைத்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. நூலகங்களின் பயன்பாடு குறித்து கல்வியமைச்சு வருடாவருடம் மதிப்பீடுகளைச் செய்து வருகின்ற போதும் வாசிப்புப் பழக்கம் வகுப்பறைகளில் ஆரம்பமானால் தான் மாணவர்களும் நன்மையடைவர் என்றார்.

விழாவில் யாழ்ப்பாண கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம், யாழ். மாநகர சபை பதில் ஆணையாளர் என்.இரத்தினசிங்கம், நூலக அபிவிருத்திக் குழுவினர் சார்பில் எம்.பரமநாதனும் உரையாற்றினார்கள்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com