Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
[13 - May - 2008] [Font Size - A - A - A]
தென்பிராந்திய ஊடகவியலாளர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருப்பது சமாதானத்திற்கான இணைப்புப் பாலமாக விளங்குகிறது. மூன்று தசாப்தகால யுத்த சோகங்களையும், ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களையும் நேரில் கண்டிருக்கிறீர்கள். இதன் மனப்பதிவுகளை செய்திகளாக வெளியிட்டு உதவுவது ஊடகவியலாளர்களாகிய உங்கள் தார்மீகப் பொறுப்பாகும்

இவ்வாறு கூறினார் பிராந்திய செய்தியாளர் எஸ். சிராஜுதீன். கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை இன்ரநியூஸ் நெட்வேர்க் கிழக்கு ஊடகஇல்லத்தினால் ஏற்பாடு செய்து சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் இடம் பெற்ற நட்புறவு மதிய போசன நிகழ்வில் ஊடகவியலாளர் சார்பில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு ஊடக இல்லப் பணிப்பாளர், ஐ.எம். சதாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அம்பாறை மாவட்ட, தென்மாகாண ஊடகவியலாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

அவர்மேலும் தெரிவித்ததாவது; தென்மாகாண ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதர வேண்டுமெனும் நீண்ட நாள் கனவை இன்ர நியூஸ் கிழக்கு ஊடக இல்லம் நிறைவேற்றியமை குறித்து எங்களது இதயம் கனிந்த பாராட்டுகளை இங்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

சமாதானத்தைத் ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் அளப்பரிய சேவை ஆற்றுகின்றனர். மதத்தால், மொழியால் வேறுபட்டிருந்தும் மனிதம் எனும் உணர்வால் நாம் ஒன்றுபட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்நிலைல்தொடர இன்ர நியூஸ் நிறுவனம் பங்களிப்புச் செய்வதோடு மீண்டும் ஒன்று கூடல்களை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று தசாப்தகால யுத்தம், ஆழிப்பேரலை அனர்த்தம் ஆகியவற்றினால் பல இன்னல்கள் மத்தியில் ஊடகவியலாளர்கள் சேவையாற்றுகின்றனர்.

இலவச பிரயாணசீட்டு, வீடமைப்பு வசதிகள் ஊடகவியலாளர்களுக்கு குறிப்பாக வெளிமாவட்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறான உதவி வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இந்த செய்தியை தென்மாகாண ஊடகவியலாளர்கள் தமது ஊடகங்களில் வெளிக்கொணர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

தெற்கு ஊடகவியலாளர் சார்பில் பி. ஜெயதிஸ்ஸ தென்னக் கோன் உரையாற்றினார். கிழக்கு ஊடக இல்ல உதவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஷருக் எம். சலீமும் இதில் கலந்து கொண்டார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com