Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
[13 - May - 2008] [Font Size - A - A - A]
மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர் , யுவதிகள் மத்தியில் இனநல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று நோர்வூட் சமூக நலன்புரி அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர் திருமதி கே.சந்திரமதி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்காக அட்டன் சீடாவள நிலையத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஒக்ஸ்பார்ம் பெருந்தோட்டப்பகுதி நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர் திருமதி மாலா ரத்னவீர மற்றும் களியபெருமாள் கத்தரின் ஜோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் செயலமர்வில் கலந்து கொண்ட இளைஞர் , யுவதிகளுக்கு இன நல்லுறவு தொடர்பான களப்பயிற்சிகள் நடத்தப்பட்டன.

திருமதி. கே.சந்திரமதி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

"நுவரெலியா மாவட்டத்தில் பொதுவாக மூவினத்தவர்களும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். இம்மாவட்டத்தில் இன முரண்பாடுகள் ஏற்படும்போது இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வு குறைந்துவிடுகின்றது.

குடும்பங்களில் முரண்பாடுகள் ஏற்படும்போது அது அப்பகுதி மக்களையும் சமூகத்தையும் வெகுவாகப் பாதித்து வேறு பிரச்சினைகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இச்சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இனங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும்போது இளைஞர்கள் சந்தோஷத்தை இழந்து மனோரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

சமூகத்திலோ, குடும்பத்திலோ பிரச்சினைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.

எனவே, நாம் இளைஞர்களுக்கு நிகழ்ச்சித்திட்டம் செய்யும்போது மூவின இளைஞர்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.

குழு ஆய்வில் கலந்துகொள்ளும் பொழுது தங்கள் இனங்களை மறந்து குழு செயல்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இதன் வழியாக மனரீதியான மாற்றம் ஏற்படுகின்றது.

இளைஞர்கள் மத்தியில் உறவைக் கட்டிஎழுப்ப அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் , சமூகத் தலைவர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவற்றினைக் கருத்திற் கொண்டு முதற் கட்டமாக அம்பகமுவ, கொத்மலை பிரதேச சபைகளுக்கு உட்பட்ட இளைஞர்கள் , யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு ஒன்றிணைந்த நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதன் மூலமாக சமூக உறவைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.

இதன்மூலமாக பின்வருவனவற்றை எதிர்பார்க்கின்றோம்.

இளைஞர்கள் மத்தியில் ஆழமான உறவுகள் ஏற்படும் . (ஆண், பெண்)

இதன் வழியாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் நம்பிக்கையும் ஏற்படுவதோடு தனிநபர், குழுக்கள் ரீதியான உறவுகள் அதிகரிக்கும்.

இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்கள் நீக்கப்பட்டு அபிவிருத்திகளை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறையும். இன முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைந்த செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் , வாய்ப்புகள் எதிர்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் உருவாகும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com