மட்டக்களப்பு நகரில் நேற்றிரவு பொலிஸ் சார்ஜன்ற் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டு. நகர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் பெற்றோல் நிலையமொன்றிலேயே நேற்று இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்காக பொலநறுவை ஹிங்குராகொட பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த பொலிஸார் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவ்விருவரும் தேர்தல் கடமையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளொன்றில் பொலநறுவை திரும்புவதற்காக புறப்பட்டு சில நிமிடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெற்றோல் நிலையத்திற்கு வந்த இவர்கள் அங்கு நின்ற போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் போது சார்ஜன்ற் பலியானதுடன், கான்ஸ்டபிள் படுகாயமடைந்துள்ளார்.
மட்டு. நகர் பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.