|
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க அமைச்சர் எஸ்.சந்திரசேகரன் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும், மலையக மக்கள் முன்னணித் தலைவருமான பெ.சந்திரசேகரனின் பணிப்பின் பேரில் நுவரெலியா மாவட்ட கொத்மலை பிரதேச செயலக பிரிவில் காமினெதன் தோட்டம், தம்புக்கஸ்தலாவ தோட்டம், கரோ மேல் பிரிவு தோட்டம், கைபொகல மத்திய பிரிவு தோட்டம் ஆகிய தோட்டங்களிலும், வலப்பன பிரதேச செயலகப் பிரிவில் டெல்மார் மத்திய பிரிவு தோட்டம், கைபொரஸ்ட் பிரிவு 3 தோட்டம், கஹவத்த தோட்டம், மாகோன தோட்டம், தங்கமலைத் தோட்டம் ஆகிய தோட்டங்களிலும், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் எல்பொட மேல் பிரிவு தோட்டம், பொனாகாட் தோட்டம் ஆகிய தோட்டங்களிலும் கங்குராங்கத்த பிரதேச செயலகப் பிரிவில் தம்பகொல கிராமத் தோட்டம், கோனாபிட்டிய வீட்டுத் திட்டம், வலகல தோட்டம் ஆகிய தோட்டங்களிலும், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் மற்றேகல கீழ்ப்பிரிவு தோட்டத்திலும், நுவரெலியா பிரதேச சபை பிரிவில் டயகம 16 பிரிவுத் தோட்டம், டிம்புல தோட்டம், மௌனவெனன் தோட்டம், புதிய பொட்மோர் தோட்டம், சாமஸ் தோட்டம், வெஸ்வாட் கோ தோட்டம் ஆகிய தோட்டங்களிலும் சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |