Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
[13 - May - 2008] [Font Size - A - A - A]
* சிறப்பான வெற்றியென பெருமிதம்; ஐ.தே.க.வுக்கு சவால்

டிட்டோகுகன்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வெற்றியானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சிக் காலத்தில் பெற்ற விசேடமான வெற்றியென மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அரசாங்கம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரமே கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் பகிரப்படுமென தெரிவித்ததுடன், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு உட்பட்ட பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

கிழக்கு மாகாண தேர்தல் வெற்றி குறித்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள மஹாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இங்கு கருத்து தெரிவித்த ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பேசுகையில்;

"ஜனாதிபதியின் இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியில் பெற்ற விஷேட வெற்றி இதுவாகும். தேர்தலின் பின்னர் கருத்து தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையாளர், தேர்தல் ஜனநாயக முறையில் நடந்து முடிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே இந்த வெற்றியானது கிழக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமன்றி, நாடு முழுவதும் பெற்ற வெற்றியாகும்.

இந்த தேர்தலின் போது, புலிகள் வன்முறைகள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஆதரவு வழங்கினர் என்பது இங்கு தெளிவான உண்மை. புலிகள் ஐ.தே.க.வுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது சாதாரண புத்தியுள்ளவர்களுக்கும் புரியும்.

இதேநேரம், ரணில் விக்கிரமசிங்க அடைந்த 17 ஆவது தோல்வியாகும். இந்த நேரத்தில் அவர்கள் எம்மை நோக்கி விரல் நீட்டுவதை விடுத்து, அவர்களது தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஐ.தே.க.வுக்கு இதற்கு முன்னர் ரணில் போன்றதொரு தலைவர் கிடைத்ததே இல்லை.

அத்துடன், தேர்தல் குறித்து ஆணையாளரும் தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பவ்ரலும் திருப்தி வெளியிட்டுள்ளன. எனினும் ஐ.தே.க.வுக்கு சார்பான `கபே' என்ற கண்காணிப்பு நிறுவனம் மட்டும் தேர்தலில் மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நாம் நிராகரிக்கிறோம்" என்றார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இங்கு கருத்து தெரிவிக்கையில்;

"இந்த தேர்தலானது, இந் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிழக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். ஐ.தே.க.,புலிகள், முஸ்லிம் காங்கிரஸ், ரவூப் ஹக்கீம் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க போன்றோருக்கு கிடைத்த தோல்வியாகும்.

தேர்தல் ஆணையாளரின் முடிவு குறித்து ஐ.தே.க.வினர் ஒருபோதும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். அந்த ஆணையாளரே தேர்தல் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சகல கட்சிகளினதும் மதிப்புக்குரியவர்.

இதேநேரம், தேர்தல் முடிவுகள் குறித்து, நீதிமன்றம் செல்லப் போவதாக ஐ.தே.க.வின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.தெரிவித்துள்ளார். முடிந்தால் நீதிமன்றம் சென்று இந்த தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்து காண்பிக்குமாறு ஐ.தே.க.வுக்கு நாம் சவால் விடுக்கிறோம்.

புலிகளும் ஐ.தே.க.வினரும் கொண்டு சென்ற பொய்ப் பிரசாரங்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் சிறந்த பதிலாக அமைந்து விட்டனீீ என்றார்.

அமைச்சர் பதியுதீன்

இதேநேரம, கிழக்கில் தங்களை ஏகப் பிரதிநிதிகளாக காப்புக் கொண்ட ரவூப் ஹக்கீம் தலைமையிலானோருக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மூலம் மக்கள் சிறந்த பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறிப்பாக, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அரச தரப்பு அமைச்சர்கள் குறிப்பாக, பொலிஸ் அதிகாரம் பற்றி பதிலளிக்க மறுத்து விட்டதுடன், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரமே அதிகாரம் பகிரப்படுமென்றும் அது கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி, சகல மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் தெரிவித்துவிட்டனர். \

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com