Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
[14 - May - 2008] [Font Size - A - A - A]
*பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை

தமிழ்ப் பத்திரிகைகளில் தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுவது இலங்கையில் இருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமே. இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளைப் பார்த்தால் தூய தமிழ்ச் சொற்கள் காணப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்கள் கலந்த ஒரு வித்தியாசமான நடையிலேயே வசனங்களும் செய்திகளும் கட்டுரைகளும் உள்ளன.

யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை இவ்வாறு கூறினார்.

ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் இதழியல் டிப்ளோமா கற்கைநெறியை மேற்கொண்டு வரும் பகுதி நேர மாணவர்களின் பயிற்சி இதழான `எழுத்தாணி' பத்திரிகையின் முதலாவது இதழின் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பயிற்சி மாணவன் என்.நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை மேலும் கூறியதாவது;

பத்திரிகைகளில் செய்திகள் மட்டுமல்ல அறிவுக்குரிய பல தகவல்கள் கட்டுரைகள் , பரீட்சைக்குரிய பாடங்கள் என்று பல்வேறு விடயங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தினமும் பத்திரிகைகள் வாசிக்க வேண்டும். இன்று உலகில் பத்திரிகையாளர்கள் மிகவும் வலிமை படைத்தவர்கள். பத்திரிகையாளர்களுக்கு உலகில் மதிப்பும் மரியாதையும் உண்டு. நினைத்தால் நாட்டின் ஆட்சியையே மாற்றக் கூடிய வலிமையும் அவர்களிடம் உண்டு. இது ஒரு சிறப்பான தொழில்.

இன்று பத்திரிகைத்துறை பாரிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுள்ளது. நவீன கருவிகளின் அறிமுகத்தால் தினமும் இலட் சக்கணக்கான பத்திரிகைப் பிரதிகளை அச்சிடமுடிகிறது.

இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்திகளுக்கே முக்கியத்துவம் தந்து பிரசுரித்து வருகின்றன. வெளிநாட்டுப் பத்திரிகைகளைப் பார்த்தால் முழுக்க முழுக்க விளம்பர மயமாகவே காட்சி தருகின்றதைக் காணலாம்.

இலத்திரனியல் ஊடகங்கள் பாரியளவில் வளர்ச்சி கண்டாலும் அவை அச்சு ஊடகங்களை ஒரு போதுமே பாதித்துவிடாது. மாறாக அவை ஒன்றுக்கொன்று பக்கத் துணையாக இருந்து வருமே தவிர போட்டிக்கு முகம் கொடுக்க முடியாது அழிந்து போகமாட்டாது.

வசதிகளும் வாய்ப்புகளும் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சாதனைகள் இருக்க மாட்டாது. அர்ப்பணிப்புகள் நிறைந்த மாணவ வர்க்கம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் சாதனைகள் நிச்சயம் இருக்கும்.

இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்டு வருகின்ற மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்க சீலர்களாக இருந்து சிறந்த முறையில் கற்கை நெறியை முன்னெடுக்க வேண்டும்.

இந்த டிப்ளோமா கற்கை நெறியை விரைவில் டிக்கிரி தரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அது உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே, சிறந்த முறையில் இக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்வதன் மூலம் மேற்படிப்புக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com