பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆங்கிலத்தில் மாத்திரமன்றி சிங்களத்திலும் தமிழிலும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. ஆங்கிலத்தில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த வலைப்பின்னல் இப்போது மும்மொழிகளிலும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு முதல் ஆங்கில மொழி வலைப்பின்னல் செயற்பட்டு வருகின்றது. இப்பொழுது நாட்டு மக்கள் சகலரும் பயன்பெறும் விதத்தில் மும்மொழி இணையத்தளம் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இந்த மும்மொழி இணையத்தளம் அமுலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அங்குரார்ப்பணம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை பொது மக்களுடன் தொடர்பான நிறுவனங்களுள் மிகச் சிலதே மும்மொழிகளில் தமது சேவைகளை வழங்குகின்றன. அந்த வகையில் தகவல்கள் சரிசமமாக மக்களைச் சென்று சேரும் வாய்ப்பு எல்லோருக்கும் சரியான விதத்தில் கிடைப்பதில்லை. இத்தகைய செயற்பாடுகள் சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் அமையும் என்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேற்றதிகாரி ரெஸான் தேவபுர தெரிவித்தார்.
www.parliament.lk G? C?n-?z-u?z-v? ??-??P ???-?-??-?z-v? ?\??-??-k-P-??U P?n ?i-??. ???-?-??-?z-v? \P? ???-?-k-P-??-?? C?-?-?n-?z-u?z-v? ??-??-P? ??-?U ?P???-??.
மக்களுக்குத் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. எமது இந்த வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும், தமது கோரிக்கைகளை இணையத்தளத்தினூடாக சமர்ப்பிக்கவும் முடியும் என்று இத்திட்டத்தின் முகாமையாளர் துஷா முகுந்தன் தெரிவித்தார்.