Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
[14 - May - 2008] [Font Size - A - A - A]
* மக்ஸிஸ் உயர்நிறைவேற்றதிகாரி சந்தீப்தாஸ்

-மலேசியாவிலிருந்து ரொஷான்நாகலிங்கம்-

சவூதி ரெலிக்கொம்மில் பங்குதாரராக பெற்றிருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் மொபிட்ரெல் சேவைக்கு பங்களிப்பினை நல்க முடியுமென நம்பிக்கையை வெளியிட்டிருக்கும் மக்ஸிஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உயர்நிறைவேற்றதிகாரி சந்தீப்தாஸ், ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மின் பங்குகளை தாங்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மலேசியாவில் உள்ள மக்ஸிஸ் ரெலிக்கொமினிகேஷன் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மக்ஸிஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது சேவையை 1995 இல் மலேசியாவில் ஆரம்பித்தது. தற்போது இங்கு 10 மில்லியன் வாடிக்கையாளரை கொண்டுள்ளதுடன், 2005 ஆம் ஆண்டு இந்தோனேசிய என்.ரி.எஸ். நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளோம்.

2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா எயார் செல்லை நாம் கொள்வனவு செய்துள்ளதுடன், சவூதி ரெலிக்கொம் பங்குகள் 25%த்தை நாம் கொள்வனவு செய்து அதன் சூழ்நிலைக்கேற்றவாறான சேவைகளை அங்கு வழங்கி வருகின்றோம்.

தற்போது மலேசியா மற்றும் இந்திய சந்தாதாரர்கள் 21 மில்லியன் பேர் உள்ளனர். இந்த குழுமத்தின் வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலராகும். மலேசியாவில் 27 மில்லியன் மக்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் 2 1/2 முதல் 3 மில்லியனாவர்.

எமது நிறுவனத்தில் 3 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். எமது நாட்டில் 2% பணவீக்கமுள்ள நிலையில் ஆண்டு தோறும் 6% பொருளாதார வளர்ச்சியை எட்டுகின்றது. எமது வாடிக்கையாளரில் முற்கட்டண வாடிக்கையாளர்கள் அதிகமாகவுள்ளதுடன், எமது பலதரப்பட்ட சேவை காரணமாக எமது வாடிக்கையாளர் அதிகரித்து செல்கின்றனர்.

இந்த வெற்றிக்கு காரணம் எமது ஊழியர்களுக்கு 3 மாத பயிற்சிகளை வழங்குவதுடன் புலமைப்பரிசுகளை வழங்கி கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதேயாகும்.

நாம் சவூதியிலுள்ள ரெலிக்கொம்மின் பங்குகளை கொள்வனவு செய்ததன் அடிப்படையில் அங்கு நாம் மேற்கொண்ட வெற்றிகரமான செயற்பாட்டின் மூலம் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மில் எம்மால் இலகுவாக பிரயோகிக்க முடியும்.

எமது புதிய சேவைகளான டேட்டாபேஸ், பிரோட்பாண்ட் ஆகியவற்றை நாம் மேற்கொள்ளவுள்ளோம். நாம் தனித்து முதலீடுகளை மேற்கொள்வதால் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு பரிமாற்ற ஆணைக்குழுவின் உத்தரவின் பிரகாரம் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கொள்வனவு நிறைவு பெற்றதும் அதன் பின்னர் ஷ்ரீலங்கா ரெலிக்கொம்மின் பணிப்பாளர் மற்றும் முகாமைத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கு மலேசிய மக்ஸிஸ் நிறுவன அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 2 இன் பின்னர் வரவுள்ளனரெனத் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com