Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
[14 - May - 2008] [Font Size - A - A - A]
2000 ஆம் ஆண்டு விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப்.கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற லெப்.கேணல் வைகுந்தனின் அஞ்சலி நிகழ்வில் உரை நிகழ்த்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1998ஆம் ஆண்டு காலத்தில் லெப்.கேணல் வைகுந்தன் கனரக ஆயுதச் சூட்டாளராக திறமையாகச் செயற்பட்டார். 2000 ஆம் ஆண்டு விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதிலும் திறம்படச் செயற்பட்டவர்.

2001 இல் கடற்புலிகள் அணியில் இணைந்து பயிற்சி எடுத்து கனரக ஆயுதப் பயன்பாட்டுக்கு பொறுப்பாக இருந்ததோடு கடற்புலிகளின் தாக்குதல்களில் மிகவும் திறமையாகச் செயற்பட்டார். இவரது கனரக சூட்டுப் பிரிவில் பல திறமையான போராளிகளை உருவாக்கினார்.

கடற்படையின் டோறாக்களை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய சம்பவங்களில் திறமையாக செயற்பட்ட இவர், சமாதான காலத்தில் மன்னார், திருகோணமலைப் பகுதிகளில் மிகவும் திறமையாகச் செயற்பட்டவர் என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்புலிகளின் கனரக படைக்கல முதன்மை ஆசிரியர் அனந்தன் கூறியதாவது:

விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்களுக்கு எதிரான தாக்குதல்களின் சிறந்த சூட்டாளனாக மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஒரு போராளி லெப்.கேணல் வைகுந்தன்.

மிகவும் நெருக்கடியான சூழலில் எல்லாம் கடல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்ட ஒரு வீரன். எமது மண் விடுதலை பெறவேண்டும் என்ற கனவுடன் பல புதிய திறமைமிக்க போராளிகளை உருவாக்குவதில் அயராது உழைத்தவர் என்றார்.

புதுக்குடியிருப்பு வணிகர் கழகத் தலைவர் செல்வச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை துணைவியார் சூட்டினார்.

வீரவணக்க உரைகளை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன், கடற்புலிகளின் கனரக படைக்கல முதன்மை ஆசிரியர் அனந்தன், கடற்புலிகளின் மகளிர் தளபதி எழிலி ஆகியோர் ஆற்றினர்.

வீரவணக்க உரைகளைத் தொடர்ந்து லெப். கேணல் வைகுந்தனின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுபடை மதிப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 11 ஆம் திகதி லெப்.கேணல் வைகுந்தன் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com