கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாக முயற்சிக்கும் பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் அப்பதவிக்கு தகுதியற்றவர்களென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;
பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவருமே கிழக்கினை ஆள்வதற்கு அடிப்படையில் தகுதியற்றவர்கள்.மோசடியும், வன்முறையும் நிறைந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் முதலமைச்சருக்காக முட்டிமோதுவது வேடிக்கையானது . எனவேதான் இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர்களென நாம் கூறுகின்றோம்.
தேர்தல் முடிவுகளையே ஏற்றுக் கொள்ளாது நிராகரித்த ஐக்கிய தேசியக்கட்சியும், முஸ்லிம் காங்கிரஸும் பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவரும் முதலமைச்சராவதற்கு பொருத்தமற்றவரென்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.