Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
[14 - May - 2008] [Font Size - A - A - A]
பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்;

லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் சீ.எம்.ஏ.ஜீ.செயற்குழுக்கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சீ.எம்.ஏ.ஜீ.ஒன்று கூடலில் ஆரம்ப உரையினை மேற்கொண்ட அமைச்சர் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குமாறு ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்டுள்ள இந்தக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, பாகிஸ்தானில் ஜனநாயகம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டதுடன், சீ.எம்.ஏ.ஜீ. விடுத்துள்ள சகல நிபந்தனைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதால் அந்நாடு சீ.எம்.ஏ.ஜீ.யின் நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார். அமைச்சரின் ஆலோசனையை சீ.எம்.ஏ.ஜீ. ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

கடந்த நவம்பர் மாதம் லண்டன் மற்றும் கம்பாலா நகர்களில் இடம்பெற்ற சீ.எம்.ஏ.ஜீ ஒன்று கூடல்களில் பாகிஸ்தானை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் போகொல்லாகம கடுமையாக எதிர்த்திருந்தார்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கம்பாலாவில் இடம்பெற்ற பொது நலவாய அமைப்பின் அரசாங்கங்களின் தலைவர்களுக்கான கூட்டத்தில் (சீ.எச்.ஓ.ஜி.எம்) இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து இடை நிறுத்தப்பட்டமைக்கு இலங்கையின் கடுமையான எதிர்ப்பை முன் வைத்தார்.

பொதுநலவாய அமைப்பினுள் பாகிஸ்தான் மீளிணைக்கப்பட்ட செய்தியினைக் கேட்ட இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சேசாட் சௌத்திரி, இலங்கை தமது நாட்டின் மீளிணைவுக்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக தனது ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நிலவும் சிநேகிதம் மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை இந்த முயற்சி பிரதிபலிப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com