மணலாறு எதாவெட்டுனுவெவ மற்றும் ஜனகபுர போன்ற கிராமப்புற பகுதிகளிலுள்ள வீடுகளில் பதுங்கு குழிகளை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் நிகழும் எல்லைக் கிராம புறங்களிலேயே பதுங்கு குழிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 மில்லியன் ரூபா செலவிலான இந்தத் திட்டத்தின் மூலம் மேற்படி கிராமப் பகுதிகளில் 600 வீடுகளில் பதுங்கு குழிகளை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அண்மையில் தேசநிர்மாண அமைச்சரான சுசந்த புஞ்சி நிலமேயினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் பதுங்கு குழிகளை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.