தாமதமாக பந்து வீசிய கங்குலியின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் `ருவென்ரி- 20' தொடர் நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) விதிமுறைகளை பின்பற்றுகிறது. ஐ.சி.சி. விதிமுறைகளின்படி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசினால் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும். கடந்த 9 ஆம் திகதி கொல்கத்தாவில் நடந்த 29 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா, பெங்களூர் அணிகள் மோதின.
இதில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தவற, இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் நடந்த 32 ஆவது லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லட்சுமண் வழி நடத்தும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதில் குறிப்பிட்ட நேரத்துக்குள் கங்குலி அணி பந்துவீச தவறியது. இரண்டு ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் போட்டி நடுவர் தலாத் அலி, கொல்கத்தா அணிக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.