Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க. தலைவர் ரணில்

எம்.ஏ.எம்.நிலாம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மக்களின் இறைமைக்கும் பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாதெனவும் நாட்டின் இறைமையை பாதுகாக்கும் பொருட்டு நாம் ஒன்றுபட்டு சர்வதேசம் தலையிடுவதற்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நாட்டு மக்களின் அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளும் மிக மோசமாக மறுக்கப்படும் நிலைமை அதிகரித்து வருவதாக விசனம் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க இவற்றைப் பார்த்துக் கொண்டு மக்கள் மௌனம் சாதித்தால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் தள்ளப்படலாமென எச்சரித்துள்ளார்.

காலம் சென்ற லலித் அத்துலத் முதலி நினைவு தினத்தையொட்டி கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் லலித் பற்றி நினைவுப் பேரூரையை நிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய விக்கிரமசிங்க தமதுரையில் தெரிவித்ததாவது;

இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத விதத்தில் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, அடிப்படை மனித உரிமை மீறல்கள் உட்பட சகல விடயங்களிலும் மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்கள் என்ன தான் குரலெழுப்பினாலும் அவை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்படுகிறது.

பாராளுமன்றம் என்பது மக்களின் அரசியலதிகாரசபையாகும். அது நீதிமன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை மறந்துவிடக்கூடாது.

அரசியலமைப்பு விதிகளை மீறி அரசாங்கம் பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டு மறுத்து வருகின்றது. அரசியலமைப்புச் சபையை அமைப்பதில் வேண்டுமென்றே காலம் கடத்தப்படுகின்றது. அதேபோன்று சுயாதீன தேர்தல், பொலிஸ், பொதுச் சேவைகள் ஆணைக்குழுக்களை நியமிப்பதையும் அரசு காலத்தைக் கடத்திக் கொண்டேபோகிறது. இவற்றை உத்தரவாதப்படுத்தினால் தங்களுடைய அரசியல் திருகுதாளங்களுக்கு வாய்ப்புக்கிட்டாமல் போகும் என்பதாலேயே போலிக் காரணங்களை காட்டி அரசு காலம் கடத்துகிறது.

ஒருநாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படாவிட்டால் அந்தநாடு படிப்படியாக அழிந்து நாசமாகிப் போகும் என்பதை உலக அரசியல் வரலாற்றிலிருந்து நாம் நிறையவே பாடம் கற்றிருக்கின்றோம். இன்று இங்கு நடப்பது ஜனநாயகத்தின் போர்வையிலான சர்வாதிகார ஆட்சிமுறையொன்றாகும். இதனைச் சொல்வதற்கு நான் பயப்படவில்லை. அதிகாரம் என்பது கூர்மையான ஆயுதமாகும். அதனை சரியான பாதைக்குப் பயன்படுத்தினால் நாடு செழிப்புற்றதாக மாறும், தவறான திசையில் பயன்படுத்தினால் அழிவுகளையே சந்திக்க நேரிடும்.

எனவே அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், பாராளுமன்றத்தின் இறையாண்மை, மக்களின் இறைமை என்பவற்றை தக்க வைத்துக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தாம் ஒன்றுபட்டு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அழுத்தத்தை தனித்து ஒரு கட்சி முன்வைப்பதைவிட ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டுச் செய்வதன் மூலம் அதனை சக்தியுள்ளதாக மாற்றியமைக்க முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com