Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை, திகாமடுல்ல, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா மூன்று உறுப்பினர்கள் வீதம் 9 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொள்ளும். இவ்வாறு பெற்றுக் கொள்வதன் மூலமாக முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

புதியகாத்தான்குடி அப்றார் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அப்றார் பள்ளிவாயல் தலைவர் எம்.கலந்தர்லெவ்வை தலைமையில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ்; இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே சிங்களவர்களே முதலமைச்சர்களாக உள்ளனர். இங்கு முஸ்லிம் ஒருவரோ தமிழர் ஒருவரோ முதலமைச்சராக வரமுடியாது. அதேபோல முஸ்லிம் ஒருவர் வடமாகாணத்திலும் முதலமைச்சராக வரமுடியாது. அங்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆனால் கிழக்கில் அவ்வாறானதோர் நிலை இல்லை. இங்கு 33 வீதமாக பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்கள் 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வட - கிழக்கு இணைப்பின் ஊடாக 17 வீதமாக குறைக்கப்பட்டு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டோம். இந்நிலையினால் 1988 இல் நடைபெற்ற வட - கிழக்கு மாகாண சபையில் இவ்வாறு சிறுபான்மையினராக காணப்பட்ட நாம் எதிர்க்கட்சியிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் கிழக்கில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டதிலிருந்து வட - கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தலைமைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் முன்வைக்கப்பட்டு வந்தது. இங்கு வாழும் முஸ்லிம் மக்கள் ஒரு சிறுகுழுவாகவே ஐ.தே.கட்சியினாலும் நோர்வே போன்ற நாடுகளாலும் நோக்கப்பட்டு வந்தது.

அதன் காரணமாகவே ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்ணவு போர் நிறுத்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளும்போது முஸ்லிம் சமூகத்தை கணக்கில் எடுக்காது புறந்தள்ளிவிட்டு அந்த ஒப்பந்தத்தைச் செய்தார். இதனையும் செய்தது ஐக்கிய தேசியக் கட்சியே. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்த துரோகத்தை முஸ்லிம் மறக்காமல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்து முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியுமென்று அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com