Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* 15 தொழிற்சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள்

யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணுமாறு அரசாங்கத்தையும், விடுதலைப்புலிகளையும் அரசாங்க மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச மே தினத்தையிட்டு15 அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் 3 மணியளவில் மாளிகாவத்த யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணுமாறு அரசாங்கத்தையும், விடுதலைப்புலிகளையும் அரசாங்க மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச மே தினத்தையிட்டு15 அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் 3 மணியளவில் மாளிகாவத்த சிறிசேன மைதானத்தை வந்தடைந்தது.

இங்கு அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய உரையாற்றுகையில்;

யுத்தத்தை உடனடியாக நிறுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகண்டு உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாம் அரசாங்கத்திடமும் புலிகளிடமும் இம் மே தினத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

யுத்தமானது இலங்கையின் அனைத்து துறைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் கூட யுத்தம் நடைபெறும் போது ஏனைய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியாதிருப்பதாக கூறினார். எனவே உடனடியாக யுத்தத்தை நிருத்துமாறு நாம் வலியுறுத்துகிறோம்.

இன்றைய மே தினத்தில் ஜே.வி.பி.க்குள் நிலவும் உள் முரண்பாடு காரணமாக ஊர்வலத்தை நடத்த முடியாமல் போயுள்ளது. ஐ.தே.க. மத வழிபாடுகளுடன் நிறுத்திக் கொண்டது. ஆளும் கட்சி தலைநகரில் ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் நடத்த முடியாது அதனை தெஹியத்தை கண்டிக்கு கொண்டு சென்றுள்ளது.

எனினும், அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்களாகிய நாம் தலைநகரில் தொழிலாளர் நலனுக்காகவும் நாட்டின் விமோசனத்திற்காகவும் மேதின ஊர்வலத்தையும், பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறோம் என்றார்.

இங்கு இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் கூறுகையில்;

முதலாம்தர மாணவர் அனுமதியை உரிய முறையில் மேற்கொள்ள முடியாமலும், இலவசப் பாடநூல்களை கூட மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியாத கையாலாகாத நிலையிலும் திணறும் அரசாங்கம் சகலவற்றுக்கும் யுத்தத்தை காரணமாக கூறுகிறது.

எனவே தான் நாம் யுத்தத்தை நிறுத்துமாறு இவ்வரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். யுத்தத்தினால் ஒரு போதுமே எமது உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாதென்பதே எமது வாதமாகும் என்றார்.

சுகாதார, சுதந்திர வர்த்தக, தபால், புகையிரத, துறைமுக, மீன்பிடி, ஆசிரியர் மற்றும் அச்சக தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 15 அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொண்டன.

ஊர்வலம் சென்ற பாதையிலும், பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தைச் சுற்றியும் பெருமளவு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com