வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மணலாறு பகுதியில் ஜனகபுரவுக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகள் மீது படையினர் கடும் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இந்த மோதலில் இருபடையினர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் காயமடைந்தனர்.விடுதலைப் புலிகள் தரப்பிலும் இருவர் கொல்லப்பட்டதாக படையினர் தெரிவித்தனர்.
இதேநேரம், வவுனியா பனிச்சங்குளம், வல்லிப்பளை பகுதியில் உழவு இயந்திரமொன்றில் சென்று கொண்டிருந்த படையினர் அமுக்க வெடியில் சிக்கியதில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்ததாகவும் படையினர் கூறுகின்றனர்.
அன்றைய தினம் காலையிலும் இரவிலும் யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் புலிகள் இழப்புக்களைச் சந்தித்ததாகவும் படையினர் கூறியுள்ளனர்.