Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அக்தரின் ஐந்தாண்டு தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக் குழு நிராகரித்தது
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* சர்வதேச, ஐ.பி.எல். வாய்ப்புமில்லை

சர்ச்சைக்குரிய சொய்ப் அக்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அநேகமாக முடிவுக்கு வருகிறது. தடையை எதிர்த்து இவர் தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் தடை நீடிக்குமென இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் `புயல்வேக' பந்துவீச்சாளர் அக்தர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (பி.சி.பி.) கொள்கையை விமர்சித்தது, சகவீரர் ஆசிப்பை துடுப்பால் தொடையில் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து, இவருக்கு பி.சி.பி., 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஐ.பி.எல்., `ருவென்ரி-20' தொடரிலும் பங்கேற்க முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் தடையை எதிர்த்து அக்தர் மேன்முறையீடு செய்தார். இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அப்தாப் பரூக் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் போது வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார்.

இந்தச் சூழலில் விசாரணைக்குழு நேற்று முன்தினம் தனது இடைக்கால தீர்ப்பை அறிவித்தது. இறுதிக் கட்ட விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நீதிபதி அப்தார் பரூக் கூறுகையில்;

"அக்தர் தன்னை திருத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஒழுக்கமின்றி நடந்துகொண்டார். இதனால் தடை நீடிக்கப்படுகிறது. ஒழுங்கு உத்தரவுப்படி பாகிஸ்தானில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. ஐ.பி.எல்., அமைப்பில் விளையாட தடை விதிக்கப்படவில்லை. அக்தர் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது இடைக்கால உத்தரவு தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு ஜூன் மாதத்தில் வழங்கப்படும்" என்றார்.

ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டாலும் அக்தர் கிரிக்கெட்டில் சம்பாதிப்பதை தடுக்க பி.சி.பி., விரும்பவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. பி.சி.பி., சட்ட ஆலோசகர் டபாசுல் கூறுகையில், "பாகிஸ்தான் தவிர எங்கு வேண்டுமானாலும் அவர் விளையாடி சம்பாதிக்கலாம். தடை பாகிஸ்தானுக்குள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்", என்றார்.

Email this page Your Opinion Print this page
காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி
ஐ.பி.எல். போட்டிகளில் அழகிகள் ஆடத் தடை
களத்தில் மீண்டும் மோசமாக நடந்தால் வாழ்நாள் தடையென ஹர்பஜனுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து நாடுதிரும்பினர்
அக்தரின் ஐந்தாண்டு தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக் குழு நிராகரித்தது
விலைமாதர்களென நினைத்து அரவாணிகளிடம் சிக்கித் தவித்த பிரேசில் வீரர் ரொனால்டோ
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com