Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
[03 - May - 2008] [Font Size - A - A - A]
* யாழ்.அரச அதிபர் கே.கணேஷ்

யாழ்.மாவட்டத்தில் போர்ச்சூழல்களினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள துறைகளில் கூட்டுறவுத்துறையும் ஒன்று. கூட்டுறவுத்துறையை கட்டி வளர்க்கும் பொறுப்பு இப்பிரதேச மக்களையே சார்ந்ததாகும். கூட்டுறவுத்துறை மூலம் நன்மைகளைப் பெறுபவர்கள் அந்தந்தப் பிரதேச மக்கள்தான், கூட்டுறவாளர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து மக்களுக்கு சகல பொருட்களையும் நியாய விலையில் வழங்கி அவர்களது வாழ்வில் பொருளாதார சுமையில் இருந்து விடுபட சேவைகளை திறம்பட வழங்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் நயினாதீவு, புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம் புங்குடுதீவில் திறந்துள்ள கோப்சிற்றி விற்பனை நிலையத்தின் விற்பனையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை காலை சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி க.இராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் தொடர்ந்து உரையாற்றுகையில்;

நெருக்கடியான காலங்களில் யாழ். மாவட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறையினரே உணவுப் பொருட்களை வழங்கிவந்தனர். இன்றைக்கும் நிவாரணங்கள் அனைத்தும் நலிவுற்ற மக்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் கூட்டுறவுத்துறையை மக்களுக்கு சேவையை வழங்கும், மக்களால் கட்டி வளர்க்கப்படும் துறையாக நாம் கட்டிவளர்ப்போமானால் அதன் நன்மை மக்களுக்கே கிடைக்கும். கூட்டுறவுத்துறையை வளப்படுத்துவதற்கு வள பங்கீடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தின் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்பட்டது.அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த மக்களின் பங்களிப்பு அவசியம். அதற்காக எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றார்.

நிகழ்வில் தலைமைதாங்கிய சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி க.இராஜரெட்ணம் உரையாற்றுகையில்; புங்குடுதீவு மக்களின் மேம்பாட்டுக்காக இங்கு நாம் கோப்சிற்றி பல்பொருள் விற்பனை நிலையத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம். இப்பிரதேசத்தின் அடிப்படைவசதிகள் மேம்படாது இருப்பதால் மக்கள் குடித்தொகை மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இப்பகுதியில் வாழும் மக்களின் நலன்கருதி கோப்சிற்றி மூலம் சகல பொருட்களையும் ஒரே இடத்தில் பெற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இன்று இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விற்பனையை ஆரம்பித்து வைத்துள்ள யாழ்.மாவட்ட அசாங்க அதிபர் இப்பிரதேச மக்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டு பலசேவைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் ஓர் நல்ல நிர்வாகியாக வளங்களை சமமாக பங்கீடு செய்து புங்குடுதீவு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்குவது உட்பட அளப்பரிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். அதற்காக இம்மக்கள் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

நிகழ்வில் யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பெ.சிவலிங்கம், செ.கனகசபாபதி, வேலணைப் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன், உட்பட யாழ்.மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சிப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com