Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
[03 - May - 2008] [Font Size - A - A - A]
* செயலாளர் ரில்வின் சில்வா

ரொஷான் நாகலிங்கம்

புதிய கட்சியை விமல் வீரவன்ச ஆரம்பிப்பது குறித்து எமக்கு எந்த சிக்கலுமில்லை என ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்ததுடன் பத்திரிகை மகாநாடு நடத்தி காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்து எம்முடன் அவர் தொடர்பு கொண்டு எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த முடியுமெனக் கூறினார்.

இலங்கை மன்ற கல்லூரியில் ஜே.வி.பி. புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

தற்போது அரசு 13 ஆவது அரசியலமைப்பை விடுத்து சமஷ்டி குறித்து பேசுகின்றது. முதலில் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த 17 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அரசியல் பேரவையை உருவாக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.

இந்தப் பேரவையை உருவாக்காததன் காரணமாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க முடியாதுள்ளது. கிழக்குத் தேர்தலில் அமைச்சர்கள் அரச நிறுவனங்களின் வாகனங்களையும் கட்டிடங்களையும் பாவிக்கின்றனர். சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்குமாயின் இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்காது. அரசாங்கம் தமது இலாப நோக்கிலேயே இதனை மேற்கொள்ளாதுள்ளது. தெகியத்த கண்டியவில் விபத்து தொடர்பில் யாவருக்கும் தெரியுமென்ற வகையில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தெரியவந்துள்ளது.

எமது கட்சியிலிருந்து சென்ற விமல் வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. கட்சியை விட்டு அவர் விலகாத நிலையில் கட்சியாப்பின் பிரகாரம் புதிய கட்சியை நிறுவ முடியாது.

அவர் சென்றதால் எமது கட்சிக்கு எந்த இழப்புமில்லை. அவர் எவரையும் கூட்டணி அழைத்து முன்னணியமைக்கும் முன்னர் கட்சியிலிருந்து விலகுமாறே நாம் கேட்கின்றோம்.

இன்னும் கட்சி உறுப்பினராகவுள்ள அவர் எம்முடன் தொடர்புகொண்டு எமது பெலவத்தையிலுள்ள தலைமையகத்தில் எப்போதும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடியும்.

நாம் அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளதன் காரணமாக தொடர்புகொள்ள முடியவில்லை. அவருக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளதனால் எமது தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்படாத நிலையில் எப்போதும் தொடர்பு கொண்டு கட்சியின் தலைமையகமுள்ள பெலவத்தையில் பேச்சுவார்த்தையை அவர் மேற்கொள்ள முடியும்.

எனவே, பத்திரிகையாளர் மகாநாட்டை நடத்தி கட்சிக்கு காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்து பேச்சுக்கு வருமாறு அழைக்கின்றோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com