Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
[03 - May - 2008] [Font Size - A - A - A]
பொகவந்தலாவையில் மேலக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக 300 ரூபா உடன், ஏனைய வருகை, விலை ஆகியவற்றிற்கான கொடுப்பனவுகள் இந்த தொகைக்கு மேலதிகமாக சேர்க்கப்படும் விதத்தில் புதிய சம்பள திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

விலைவாசி உயர்வினால் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாவும் மண்ணெண்ணெயும் மானிய விலையில் சீராக மலையகமெங்கும் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

மலையக தோட்டப்புறங்களில் அரசியல் தொழிற்சங்க செல்வாக்குகளுடன் நடத்தப்படும் கள்ளச்சாராய உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகிய சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கள்ளச்சாராய கலாசாரம் மலையகத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும்.

டிக்கோயாவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 500 படுக்கைகள் கொண்ட பாரிய மருத்துவமனையாக உருவாக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் இணைந்து உடன்பாட்டிற்கு வரவேண்டும்.

இந்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் நடைபெறும் வன்முறை நிகழ்வுகளில் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் பொதுமக்கள் பலியாவது, அரசியல் படுகொலைகள், கடத்தல், காணாமல்போதல்கள் ஆகியவற்றிக்கு காரணமான அனைத்து அரசு மற்றும் அரசசார்பற்ற பயங்கரவாதங்களும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

எமது நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் மூலகாரணமாக அமைந்துள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காணும் போக்கு நிறுத்தப்பட்டு அரசியல் அதிகாரத்தை பிராந்தியங்களுக்கு பிரித்து வழங்குவதன் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

மலையகத்தில் உயர்கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டன் வலயத்தில் மலையக பல்கலைக்கழக கல்லூரி ஒன்றினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைத்து உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டும்.

அம்பகமுவ, நுவரெலிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் மேலும் மூன்று தமிழ் பிரதேச செயலக பிரிவுகள் உருவாக்கப்பட்டு அங்கு பிரதேச சபைகள் செயற்பட வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து தமிழ் பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தமிழ் பிரதேச செயலாளர்களும் தமிழ் அரச ஊழியர்களும் நியமிக்கப்பட்டு தமிழ் மொழியில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மலையகத்திலிருந்து சிறுவர்கள் சட்டவிரோதமான முறையில் தொழில்களுக்காக கடத்தப்படும் செயற்பாடுகள் சட்டரீதியாக அடையாளம் காணப்பட்டு இக்கொடுமை முற்றுமுழுதாக மலையகத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும்.

இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை ஆகிய ஒதுக்குப்புற மாவட்டங்களில் வாழும் சுமார் இரண்டரை இலட்சம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இனவாத வன்முறை தாக்குதல்கள் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், இத்தகைய துன்பங்களுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் அக்கறை செலுத்த வேண்டும்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com