Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
[03 - May - 2008] [Font Size - A - A - A]
* திருமாவளவன் கேள்வி

தமிழ் நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகளின் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொ. திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

"இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கருணா குழுவினர் தமிழ் நாட்டில் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி விடுதலைப் புலிகள் மீது பழிபோட சதி நடக்கின்றது என்று இந்திய அரசின் உளவுப் பிரிவு தமிழ் நாடு பொலிஸாருக்கு எச்சரிக்கை செய்ததாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு முறையும் இலங்கை படையினர் விடுதலைப் புலிகளால் பெரும் பாதிப்பிற்கும் இழப்பிற்கும் ஆளாகும் போதெல்லாம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வுகள் நிகழ்வதுண்டு.

எடுத்துக்காட்டாக கடந்த வாரம் முகமாலைப் பகுதியில் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான படையினர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் இந்திய உளவுப் பிரிவு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இத்தனை ஆண்டு காலம் தமிழ் நாட்டில் புலிகள் ஊடுருவல் என்ற செய்தியை பல நூறு முறை தமிழ் நாட்டின் ஊடகங்களில் உலவவிட்ட இந்திய உளவுப் பிரிவு, முதன் முறையாக கருணா பிரிவு ஊடுருவல்- தலைவர்களைக் கடத்திப் புலிகள் மீது பழிபோட முயற்சி என்று கரிசனம் காட்டியுள்ளது.

தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் என்று ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்- தமிழ்த் தேசியத் தலைவர்களை தடாவிலும் பொடாவிலும் ஆண்டுக் கணக்கில் சிறையிலடைத்தவர்கள் இப்போது புலிகளின் மீது பழி போடப் போகின்றார்களே என்று கலங்குகின்றனர்.

இலங்கை படையுடன் இணைந்து செயற்படும் கருணா குழுவினர் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசும் உளவுப் பிரிவும் தான் கருணா குழு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து விட்டது என்று கூறி இலங்கை படைகளுக்கு ராடர்களையும் ஆயுதங்களையும் வாரி வாரி வழங்கி வருகின்றது.

இந்நிலையில், திடீரென்று கருணா குழு பயங்கரவாதிகளாக இந்திய உளவுப் பிரிவின் கண்களுக்குத் தெரிகின்றது.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைப் படைக்கு இராணுவ உதவி செய்யாதே! என்று தமிழக மக்களை விடுதலைச் சிறுத்தைகள் அணி திரட்டியது.

அதே காலகட்டத்தில் வன்னிப் பகுதியில், எல்லைப் பகுதியில் புலிகளின் முன் இலங்கைப் படை முழுவதுமாக செயலிழந்து நின்றது.

இந்நிலையில் இலங்கை படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தது. இது தமிழ் நாட்டிலும் இலங்கைத் தமிழர் பகுதிகளிலும் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசு முன் முயற்சிகளைத் தொடங்கியது.

இது இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற குரல் தமிழ் நாட்டிலிருந்து வெடித்துக் கிளம்பின. இந்நிலையில், தான் பன்னாட்டு அரங்கில் இந்தியத் தலையீடு வலியுறுத்தப்படுகின்றது.

குறிப்பாக அண்மையில் நோர்வேயில் ஆன்மீகவாதி ரவிசங்கரின் முயற்சியில் நிகழ்ந்த தெற்காசிய அமைதி மாநாட்டில் ஈழச் சிக்கலில் இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் இன்று இலங்கைப் படையுடன் இணைந்து இயங்கும் கருணா குழு என்று குறிப்பிட்டுள்ளது இந்திய உளவுப் பிரிவு.

இந்நிலையில், இந்திய அரசு இலங்கை அரசுக்குக் கொடுத்த ராடர்களையும் ஆயுதங்களையும் கப்பல்களையும் திரும்பப் பெறுமா?

தமிழ் நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையை கண்டிக்குமா?

கருணா குழு தமிழ் நாட்டில் ஊடுருவல் என்று கூறியுள்ள இந்திய அரசு இந்தச் செய்தியை வழக்கம் போல் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் கசிய விட்டிருக்கின்றதா?

அல்லது ஒரு உண்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் பன்னாட்டு உறவுகள் குறித்தக் கோட்பாடுகளுக்கு இசைவாக சரியான புரிந்துணர்வுடன் இந்தியத் தலையீடு என்கின்ற தனது கடமையைச் செய்யப் போகின்றதா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மீறி வடக்கு- கிழக்கு மாகாணத்தைப் பிரிக்கும் இலங்கை அரசின் சதியை முறியடிக்க இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆவண செய்ய வேண்டும்.

அண்மையில் கடத்தப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com