Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
[03 - May - 2008] [Font Size - A - A - A]
* மேல் மாகாண சபை உறுப்பினர் ராம் கோரிக்கை

ரொஷான் நாகலிங்கம்

கிழக்கு தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் மக்கள் யுத்தத்தையல்லாமல் சமாதானத்தையே விரும்புகின்றனரென்ற செய்தியை அரசுக்கு தெரிவிக்க முடியுமென மேல்மாகாண சபை உறுப்பினர் சி.வை.சி.ராம்.தெரிவித்தார்.

அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தினால் மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்துவதற்கு அல்லல்படுகின்ற நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்,

"ஐ.தே.கட்சியின் 2 1/2 வருட ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. நாட்டில் சமாதானம் ஏற்பட்டதுடன் மக்கள் வடக்குக்கும் தெற்குக்குமென எங்கும் எந்தவித பயமுமின்றி சுதந்திரமாக சென்று வந்தனர். அந்த காலகட்டத்தில் இன ஐக்கியம் ஏற்பட்டதுடன் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இதற்கு காரணம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமையேயாகும்.

அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்தால், இவை எல்லாம் இல்லாமல் போனதன் விளைவாக நாடு அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் பலியாவதுடன் கடத்தல் உட்பட மனித உரிமை மீறல்கள் அதிகரித்ததன் விளைவாக மக்கள் இன்று அச்சமடைந்துள்ளதுடன் விலைவாசியுயர்வால் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்க மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக குறிப்பாக வறிய மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்த முடியாதுள்ளனரெனினும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எமது அயல்நாடான இந்தியாவிலும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதெனினும் மக்களின் வருமானம் அதிகரித்ததன் காரணமாக பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன் இந்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு அரசு மக்கள் குறித்து அக்கறை செலுத்தாது யுத்தத்தை முன்னெடுக்கின்றது.

யுத்தத்தின் மூலம் எதுவித நன்மையையும் பெற்றுக்கொள்ள முடியாது. சமாதானத்தை மதிக்கின்ற கட்சி ஐ.தே.க. வேயாகும். அக்கட்சி ஆட்சிப்பீடம் ஏறும்போதே நாட்டில் சமாதானம் ஏற்படும்.

தற்போது கிழக்கு தேர்தலில் ஐ.தே.க.வுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளை ஆயுதக் குழுவினர் அம்மக்களை மிரட்டி பறிக்க முயற்சிக்கின்றனர். அம்மக்கள் பல்வேறு துன்பங்களின் மத்தியில் வாழ்கின்ற நிலையில் ஐ.தே.க.வுக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழமுடியுமென்ற காரணத்தால் ஜனநாயகக் கட்சியான ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க வேண்டும்.

அதாவது கிழக்கு மக்களுக்கு விடிவை, சுதந்திரதைத் பெற்றுக் கொடுப்பதற்காகவே இத்தேர்தலில் ஐ.தே.க.களத்தில் குதித்துள்ளதனால் அராஜகத்தை ஏற்படுத்துகின்ற தீய சக்திகளுக்கு வாக்களிக்காது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த கூடிய கட்சியான ஐ.தே.க.வுக்கே வாக்களிக்குமாறு நான் அம்மக்களை கோருகின்றேன்.

இத்தேர்தலில் ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் வெற்றியானது, அரசுக்கு மக்கள் தமது துன்பங்களிலிருந்து விடுதலைபெற சமாதானத்தை விரும்புகின்றார்கள் என்ற செய்தியை வழங்குமென்ற காரணத்தால் ஆயுதக் குழுவுக்கல்லாமல், ஜனாநாயக கட்சியான ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க வேண்டு"மென்றார்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
கிழக்கு தேர்தல் பிரசாரத்தில் இலக்கத்தகடற்ற வாகனங்கள்
சமாதானமே இலங்கையரின் எதிர்பார்ப்பு விடுதலைப்புலிகளுடனும் பேச்சுக்கு தயார்
5 இராணுவத்தினர், 20 க்கும் மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் பலி; படைத்தரப்பு தெரிவிப்பு
கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்
தமிழக கடலோரம் 2 இழுவை கப்பல்கள் கரையொதுங்கியதால் பெரும் பதற்றம்
`பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் காலத்தை நழுவவிட்டிருக்கும் அரசு'
குளவிகள் கொட்டி 20 மாணவர் படுகாயம்
நீதிமன்றத்தில் அறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் வெள்ளி முதல் பகிஷ்கரிப்பு
வெள்ளவத்தை வீதி விபத்தில் பெண் பலி காரினால் மோதுண்டவரை பஸ் நசித்தது
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
ஆட்டோ சாரதியை காணவில்லை
பிரான்ஸில் நடைபெற்ற மேதின நிகழ்வில் 7000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
மக்கள் விரும்புவது சமாதானத்தையே; யுத்தத்தை அல்ல ஐ.தே.க.வுக்கு வாக்களித்து செய்தியை வெளிப்படுத்துங்கள்
ஊடகவியலாளர்கள் குழு மட்டக்களப்பு, அம்பாறை விஜயம்
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
நளினியின் விடுதலை கோரும் மனுவுக்கும் பிரியங்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
அதி உயர் விருதுகள் வழங்கப்பட்டு முப்படைத்தளபதிகள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு த.ம.வி.பு.வினரால் தொடர்ந்தும் மரண அச்சுறுத்தல்
பயங்கரவாத அமைப்புகள் இணையத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய முடிவு
புலிகள் மீது பழிபோட கருணா குழு சதியென கூறும் இந்திய அரசு உளவுத்துறையின் நிலைப்பாடு என்ன?
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி 185 ஆவது ஆண்டு நிறைவு விழா
தென்னிலங்கையில் 2,123 சிவில் பாதுகாப்பு குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தை த.ம.வி.பு. ஆயுதத்துடன் நடத்தவில்லை
கிழக்கு தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும் தரப்பினர் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு எதுவும் தெரியாது
ஆசிரிய ஆலோசகர்கள் வாரத்தில் இருநாள் பாடசாலையில் கடமையாற்றும் தீர்மானம் வாபஸ்
தமிழ் மக்களின் உரிமைகளை அகிம்சை ரீதியாக பெற வேண்டுமென செயற்பட்டவர் தந்தை செல்வா
வவுனியா, மன்னார் விலை மதிப்பீட்டு திணைக்கள வேலைகள் அநுராதபுர அலுவலகத்துடன் இணைப்பு
மலையக அரசியல், தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்ட தீர்மானங்கள்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியண்ணன் தோரணையில் இந்தியா தலையிட ஒருபோதும் இடமளிக்ககூடாது
பொதுச் சொத்துக்களை விழுங்கும் அரசியல் முதலைகளை சாடுகிறார் சபாநாயகர்
சொந்த மண்ணில் மக்களுக்கு பிழையான தகவலை வழங்குவது போர் தந்திரமாகவோ பயங்கரவாத ஒழிப்பாகவோ அமையாது
வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பித்தால் ஜே.வி.பி.க்கு எந்தவொரு சிக்கலும் இல்லை
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்
கூட்டுறவாளர்கள் பொருட்களை நியாய விலையில் வழங்கி மக்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட உதவ வேண்டும்
வானில் கடத்தப்பட்ட ஜெலிக்நைற் குச்சிகள் பாலாவியில் கடற்படையால் கண்டுபிடிப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மரணம்
ரவூப் ஹக்கீமின் வலைக்குள் வீழ்ந்து விடாது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்
பிள்ளையான் குழுவுடனான ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்ட கப்பல் சின்ன குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் வரப்பிரசாதமாகும்
பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஜயலத் மட்டக்களப்புக்கு விஜயம்
தமிழ்-முஸ்லிம் உறவில் பகை உணர்வை வளர்க்கும் அரசின் திட்டமே கிழக்கு மாகாண சபை தேர்தல்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com