Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் தடையை மீறத் தமிழக மீனவர்கள் முடிவு?
[04 - May - 2008] [Font Size - A - A - A]
சென்னை: தடை காரணமாக, தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததை இலங்கை மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டு இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருவது அதிகரித்து வருவதால் இனிமேல் தமிழக அரசின் தடையை மீறப்போவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

மீன்களின் இனப் பெருக்கத்துக்காக, கிழக்கு கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே இறுதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக் காலத்தில் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிவாரணத் தொகை பிரச்சினை ஒருபுறம் இருக்க, இலங்கை மீனவர்களோ வேறொரு ரூபத்தில் தொல்லை தருகின்றனர்.

தடைக் காலம் என்பதால் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். "தடைக் காலத்தில், கடலில் மீனவர்கள் இல்லாத காரணத்தால், இந்திய கடலோரப் பகுதிகளுக்குள் இலங்கை மீனவர்கள் எளிதில் நுழைகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை காசிமேடு மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் 15 இற்கும் மேற்பட்ட படகுகளில் இந்தியக் கடல் பகுதிக்குள் வந்து இந்திய கடலோர காவல் படையிடம் இலங்கை மீனவர்கள் பிடிபட்டுள்ளனர்" என்கிறார் தென்னிந்திய மீனவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கு. பாரதி.

அத்துமீறி உள்ளே வரும் இலங்கை மீனவர்களை சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்திய கடலோர காவல் படை ஈடுபடுவது கிடையாது.

இது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றனர் தமிழக மீனவர்கள். இலங்கையில் தமிழக மீனவர்கள் பிடிபட்டால் அவர்களை சிறையில் அடைக்கின்றனர். இங்கு மட்டும் இலங்கை மீனவர்களிடம் கரிசனம் காட்டப்படுகிறது.

"அத்துமீறி நுழைந்தாலும், பல சமயங்களில் இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் `அன்போடு' வழியனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம், இலங்கை மீனவர்களுக்கு சாதகமாக கடலோர காவல் படையினர் செயல்படுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டுகின்றனர் தமிழக மீனவர்கள்.

Email this page Your Opinion Print this page
புதன் நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு கிழக்கின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
அரச, தனியார் ஊழியருக்கு 4 மணிநேரம் விடுமுறை
ஜிந்துப்பிட்டி பகுதியை சுற்றிவளைத்து பொலிஸார், இராணுவம் தீவிர தேடுதல்
சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே வடக்கு விசேட செயலணிக்குழு
ஊடகவியலாளருக்கு இலங்கையில் நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள்
மணலாறு, கெப்பிட்டிஹொலாவ பகுதிகளில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
கிழக்கில் இதுவரை 50 தேர்தல் வன்முறைகள்
கிண்ணியாவில் தபாலக ஊழியர் சுட்டுக்கொலை
முகமாலையில் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான நிலையிலுள்ளனர்
கிளைமோர் தாக்குதலில் மின்கோபுரம் சேதம்
மன்னாரில் மோதல் படைவீரர் பலி; 4 பேர் காயம்
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் ஆதாரங்களுடன் முறையீடு
வைத்தியசாலை மாடியிலிருந்து விழுந்து குழந்தை பலி; தாயாருக்கு விளக்க மறியல்
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 இலங்கை மீனவரும் விடுவிக்கப்படுவர்
கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் இளைஞர்கள் கைது
பூஜாபிட்டியவில் 4 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை
12 நாட்களில் முழு நீளத் திரைப்படம் சுரேஷ்யோக்கிம் கின்னஸ் சாதனை முயற்சி
கிழக்கு தேர்தலின் பின் ஜே.வி.பி.அதிருப்திக்குழு புதிய கட்சியை பதிவு செய்ய தீர்மானம்
2 ஆளும் கட்சி எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பு
தனது துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
பிரியங்கா - நளினி சந்திப்பை திட்டமிட்டு மறைத்த சிறை அத்தியட்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிழக்கில் ஜே.வி.பி.யும் தேர்தல் பணிகளில் தீவிரம்
கிழக்கில் தமிழர்களின் வாக்குகளே எவர் முதலமைச்சர் என்பதை தீர்மானிக்கும்
கொடுவாமடு கிராமத்தில் 121 குடும்பங்கள் மீளக்குடியமர்வு
இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் தடையை மீறத் தமிழக மீனவர்கள் முடிவு?
தமிழ் மக்களை எனது கணவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை
கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு 7 தமிழ் இளைஞர்கள் கைது
குறைவருடப் பாராளுமன்றக் கலைப்பு
தெற்காசிய பிராந்தியத்தின் இறுதி நோயாளியாக இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com