பலாங்கொடை வலேபொடை, பூஜாபிட்டிய எனுமிடத்தில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண்ணினது சடலத்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெரக்கெட்டிய எனுமிடத்தைச் சேர்ந்த இந்திராணி (வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.