கம்பஹாவில் சில இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இரு தமிழ் இளைஞர்களும், ஐந்து சிங்கள இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று சனிக்கிழமை காலை 6 மணி வரையும் பொலிஸார் இந்தத் தேடுதலை நடத்தினார்கள்.
இவர்கள் தமது ஆள் அடையாளத்தையும், வதிவிடத்தையும் சரியாக உறுதிப்படுத்தாததன் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான தமிழ் இளைஞர்கள் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள இளைஞர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இங்குள்ள வர்த்தக நிலையங்களில் இவர்கள் பணியாற்றிவந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.