இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று சனிக்கிழமை காலை வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வன்னிக் களமுனை தொடர்பான நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கிலேயே இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இவருடன் கூட்டுப்படைகளின் தளபதி ஏயார் சீவ் மாஷல் டொனால்ட் பெரேரா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.
இவர்களை வன்னித் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வரவேற்றதுடன் கள நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தார்.