Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
* பொகவந்தலாவை மேதினக் கூட்டத்தில் மனோகணேசன்

நாட்டின் ஏனைய இனங்களுக்கு சமனாக எமது மக்கள் வளர்ந்துவிட வில்லையென்றால் அதற்கு காரணம் மாறி, மாறி ஆட்சியமைக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் ஆட்சியாளர்களே என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவையில் நடைபெற்ற ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜ.தொ.கா. மேதினப் பேரணியிலும் ஊர்வலத்திலும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மனோகணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது; ஜ.தொ.கா. தலைவர் அப்துல் அஸீஸ், இ.தொ.கா. தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகிய இருவரும் இந்தியவம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நியமன எம்.பி.க்களாக இருந்தார்கள் ஏனென்றால் அன்று மலையக மக்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் இருக்கவில்லை.

எமக்கு தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. இன்று நிலைமை மாறிவிட்டது. மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் நூற்றுக்கணக்கான மலையகப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். இன்று எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. அமைச்சுக்கள் இல்லை. அதனால் அபிவிருத்தி இல்லை என்று எவரும் ஒப்பாரிவைக்கமுடியாது.

எமக்கு அரசியல் அதிகாரம் இல்லாததால் மலையகத்தை அபிவிருத்தி செய்யமுடியவில்லை என்று எவரும் காரணம் காட்ட முடியாது.

மலையகத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தும் நாட்டின் ஏனைய இனங்களுக்கு சமமாக எமது மக்கள் வளர்ந்துவிடவில்லையென்றால் வாக்குகளையும் சந்தாவையும் வாங்கிக்கொண்டு மாறி மாறி வரும் அரசாங்கங்களில் அங்கம் வகித்துவரும் ஆட்சியாளர்களிடம் தான் இருக்கின்றது.

ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலேயே முதன் முறையாக அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டது போலவும், இன்றைய அரசாங்கத்தின் பாரிய நிதி நெருக்கடி காரணமாக அடிக்கல் நாட்டுவதை தவிர உருப்படியாக எதுவுமே செய்யமுடியவில்லை என்றும் மலையகத்தில் இன்று சிலர் வாக்குமூலம் கொடுக்கின்றார்கள்.

எங்கள் வாக்குளை பெற்றீர்கள். எங்கள் சந்தாவை வாங்குகின்றீர்கள். எங்கே மலையக அபிவிருத்தி? எங்கே நியாயமான சம்பளம் ? என்று தோட்டத் தொழிலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தப் பொய்யான வாக்குமூலங்கள் பதில்களாக அமைய முடியாது.

இன்று உலக உலா வரும் மலையக அமைச்சர்களின் வரலாறு நேற்று ஆரம்பிக்கவில்லை. 1978 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 வருடங்களாக இந்த அமைச்சு அதிகார வரலாறு தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச, விஜயதுங்க, சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரது மாறிமாறிவரும் அனைத்து அரசாங்கங்களிலும் இவர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.

கிராமிய அபிவிருத்தியிலிருந்து, கால்நடைவளர்ப்பு, சுற்றுலா, புடவைக் கைத்தொழில், பெருந்தோட்ட வீடமைப்பு, தேசிய வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு என்று பாரிய பொறுப்புகளைக் கொண்ட அமைச்சுக்கள் மலையக மந்திரிகளிடம் இருந்துள்ளன. இன்னமும் இருக்கின்றன.

ஆனால் மலையகத்தில் எமது மக்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் வரவில்லை. புதிய காற்று வீசவில்லை. ஆகவே பெரும்பான்மை அரசியல்வாதிகளையும் அரசாங்கங்களையும் குறை கூறிக்கொண்டு தொடர்ந்தும் மலையகத்தில் அரசியல் நடத்த முடியாது. தேர்தல்காலங்களிலும் மேதின விழாக்களிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்ற முடியாது.

அடிக்கல்களை மாத்திரம் நாட்டி வைத்துக்கொண்டு அபிவிருத்தி அதோவருகிறது என்று கட்டியம் கூறும் அரசியல் நடத்தமுடியாது. இவற்றிற்கு முடிவுகாண மலையகப் பெரியோர்களும் தாய்மார்களும் குறிப்பாக இளைஞர்களும் முன்வரவேண்டும்.

இன்றைய எமது மேதின விழாவிலே எதிர்கால மலையகத்தை பற்றிய எமது கனவை நாம் அறிவித்திருக்கின்றோம். தோட்டத்தொழிலாளர்களுக்கு புதிய சம்பளத் திட்டத்தை கோருகின்றோம். துன்புறும் நமது மக்களுக்கு மாவும், மண்ணெண்ணையும், மானியமாக கேட்கின்றோம். அரசியல் தொழிற்சங்க செல்வாக்குடன் நடைபெறும் கள்ளச்சாரய காலசாரத்திற்கு முடிவைக் கோருகின்றோம்.

டிக்கோயாவில் அமையும் மருத்துவமனை 500 படுக்கைகள் கொண்ட பாரிய மருத்துவமனையாக அமைக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கத்தை கோருகின்றோம். மலையகக் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்த மலையக பல்கலைக்கழக கல்லூரியை உருவாக்கிடவும் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை கோருகின்றோம். நுவரெலியா மாவட்டத்தில் மேலும் மூன்று தமிழ் பிரதேச செயலக பிரிவுகளை கோருகின்றோம்.

இந்த தமிழ் பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் ஊழியர்களையும், தமிழ் மொழி மூல நிர்வாகத்தையும் கோருகின்றோம். மலையகத்திலிருந்து சிறுவர்கள் கொத்தடிமைகளாக கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை ஆகிய ஒதுக்குப்புற மாவட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் இனவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர கோருகின்றோம். இவையே மலையகம் தொடர்பிலான மேலக மக்கள் முன்னணியின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தூரநோக்குத் திட்டமாகும்.

இவற்றுடன் எமது மலையகம் தொடர்பிலான தூரப்பார்வையும் இருக்கின்றது. இத்தகைய தகைமைகளுடன் மலையகத்திலே முழுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய காற்றை வீசச் செய்வதற்கும் மேலக மக்கள் முன்னணியின் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் முழு மூச்சுடன் செயற்படவேண்டும் என்பது காலத்தின் கட்டளையாகும் என்றார்.

Email this page Your Opinion Print this page
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மணலாறு, மன்னார் மோதல்களில் 10 படையினர் பலி; 15 பேர் காயம்
கிழக்கு மாகாண பாடசாலைகள் 9 ஆம் திகதி மூடப்படும்
மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமனம்
அம்பாறையில் அதிகாலையில் கடும் தாக்குதல் ஐ.தே.க.வின் பிரதம அமைப்பாளர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று உயர் மட்டக்கூட்டம்
கிழக்குத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுதபாணியாக ஐ.தே.க. போட்டியிடுகிறது
மினுவாங்கொடை, இரத்மலானை சுற்றிவளைப்பில் 41 பேர் கைது
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்
தபால் திணைக்களத்திற்கு 300 மில்லியன் ரூபா நஷ்டம் அரசுக்கு பெரும் சுமையான விவகாரம்
1,70,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாததால் சந்தேகம்
எஸ்.பி.யை தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. யாக்க ஐ.தே.க.வினர் முயற்சி
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்பு
யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சிக்கல்லூரிக்கு புதிய கல்வியாண்டில் 200 மாணவர்கள் அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
தென்மராட்சிப் பகுதியில் நான்கு இடங்களில் காலபோகச் செய்கைக்கு படைத்தரப்பு அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
வவுனியா ஆஸ்பத்திரியில் 40 லட்சம் ரூபாசெலவில் மனநோய் சிகிச்சைப் பிரிவு
யுத்தத்தின் பின்னடைவை மூடி மறைக்கவே தமிழரைக் கைதுசெய்து அரசு பழிவாங்குகிறது
மடுவை புனித பிரதேசமாக்க அரசு முயன்றால் ஹெலஉறுமய அதனை கடுமையாக எதிர்க்கும்
குளியாப்பிட்டி கொழும்பு பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு வேண்டுகோள்
அகதிகள் முகாமில் இலங்கையர் தற்கொலை
சந்திவெளி வாகன விபத்தில் இரு இராணுவத்தினர் பலி
பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு 3 நாள் விஜயம்
மிகின் லங்காவின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக இடைநிறுத்தம்
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
மாரவில வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து அரசு விரிக்கும் மாய வலையில் சிக்காதிருப்போம்
மதகுருமார் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அமைச்சர்கள் இன்று மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வாக்கு கேட்கின்றனர்
தேர்தல் பிரசாரத்திற்கு அரச ஊடகங்களை ஐ.ம.சு.மு. துஷ்பிரயோகம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு
சம்மாந்துறையில் இன்று பிரசாரக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்கிறார்
தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்தனர்
மாகாண சபைத் தேர்தலில் அரச பிரதிநிதிகளை தெரிவு செய்தால் முரண்பாடற்ற நிர்வாகம் ஏற்படும்
உகண பிரதேச ஜே.வி.பி. ஆதரவாளர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொண்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளை கண்டன
பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் திட்டம்
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க ஹக்கீம் தயங்கார்
தமிழ் இனத்தின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு பிரபாகரன் பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் உதவி
இலங்கையில் வேலையற்றோரின் தொகை 4, 47,000 ஆக அதிகரிப்பு
கௌரவமான ஒரு சமூகமாக மலையக மக்கள் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும்
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
நவீன அணுகுமுறையினூடாக தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்
மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com