Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
* மே தினக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன்

மலையக மக்களினதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினதும் அரசியல் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மேதின வைபவம் நேற்று வியாழக்கிழமை பண்டாரவளை நகரில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட அமைச்சர் சந்திரசேகரன் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

"உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்" என்று அறைகூவிய சீன தத்துவஞானி மாவோவின் கருத்திலும் புரட்சிவாத கருத்துக்களை முன்வைத்த லெனின், சேகுவேரா, இன்னும் முகம்காட்டிக் கொண்டிருக்கிற ஃபிடரல் காஸ்ரோ போன்றவர்களின் அரசியல் தத்துவத்தை பாலர் பாடமாக படித்தவன் நான்.

இலங்கையில் இடதுசாரிகள் என்று எனக்கு விபரம் தெரிந்த காலகட்டத்தில் செயற்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா, கலாநிதி என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் போன்றவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட வரலாற்றையும் தெரிந்தவன் நான்.

மலையக மக்களின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் அனைத்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலும் இந்நாட்டிற்கு விமோசனமே ஏற்பட முடியாது.

வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வை உலக அரங்குக்குக் கொண்டு சென்று, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளே! அதேபோல, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எந்த அரசியல் ஆதரவும் இன்றி மலையக மக்களின் நலனுக்காக போராடியதுதான் அவர்களின் ஆரம்பகால வரலாறு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

மலையக மக்கள் முன்னணியும் அது உருவாகிய காலத்திலிருந்து யாருடைய தயவையும் தேடி நின்று செயல்பட்ட அமைப்பல்ல. எமது அமைப்பு வளர்வதற்குத் தடையாக அரசாங்கமும் மலையகத்தில் செல்வாக்கு பெற்ற அமைப்புகளும் செயல்பட்ட காலத்தில் கூட எதிர்நீச்சல் போட்டே மலையக மக்கள் முன்னணி இன்று தேசிய கட்சிகளுக்கு நிகராக வளர்ச்சியடைந்திருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி, இன்று ஊவா மாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும், தென்பகுதியிலும் தொழிற்சங்க பலத்தையும் அரசியல் பலத்தையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்களுடன் இணைந்து வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும் இணைத்தலைவராக செயற்படுவதற்கு அமரர் தொண்டமான் முன்வந்தார். ஆனால், இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினையை அந்நிய பிரச்சினையாக கருதுவதுபோல் தோன்றுகின்றது.

நாம் அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தாலும் மலையக மக்களுக்காக போராடவும் அனைத்து சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கவும் இன்றும் தயாராகவே இருக்கின்றோம். இதுதான் எங்களது அரசியல் நிலைப்பாடாகும்.

இன்று இ.தொ.கா.விலிருந்து சுயலாபத்திற்காக பிரிந்து போனவர்களுக்கு அமைச்சர்களுக்கும் கிடைக்காத அரசின் ஆசீர்வாதம் கிடைத்தது வருகின்றது. அதேபோல் மலையக மக்கள் முன்னணியிலிருந்து பேராசையுடன் பிரிந்து போனவர்களுக்குக்கூட அமைச்சர் பதவிகளும் வாகனங்களும் நிதி ஒதுக்கீடும் அரசின் அங்கீகாரமும் பெருமளவு கிடைத்து வருகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்களைக் கூறுபோட எவ்விதமான அரசியல் வியூகங்கள் அமைக்கப்படுகின்றனவோ, அதற்கு நிகராக மலையக மக்களையும் பிளவுபடுத்தும் விதமாக பல காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இந்நேரத்தில் மிகப்பெரும் அரசியல் சக்திகளாக மலையக மக்கள் முன்னணியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் சில விடயங்களில் புரிந்துணர்வோடு உடன்பாட்டிற்கு வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

நாம் கடந்த மூன்று அரசுகளில் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். ஆனால், எவருக்கும் கடமைப்பட்டவர்களாகவோ அல்லது தன்னலம் கருதி நடந்து கொண்டவர்களாகவோ எமது வரலாறு அமையவில்லை.

அடையாள அட்டை இல்லாமை போன்ற சில அற்ப காரணங்களால் மலையக இளைஞர்களும் யுவதிகளும் அன்றாடம் கைது செய்யப்படுகின்றார்கள். ஆனால், வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் போராட்டத்தை ஆதரித்து மலையக மக்களை வீதியில் இறக்கிவிட்டால் இலட்சக்கணக்கானவர்களை கைது செய்யவேண்டி வரும் என்பதை மலையக இளம் சந்ததியினர் சார்பாக எடுத்து கூற விரும்புகின்றேன்.

ஒருநாள் கால அவகாசத்தில் மலையகத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். அத்தகைய நிலை இனியும் ஏற்படுமென்றால் அதனை செய்து காட்டக்கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது என்பதை மலையக மக்களின் ஆதரவோடு நிரூபித்துக்காட்டுவோம்.

நமது ஊதிய உயர்வுக்காக தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்தபோதும் மலையக மக்கள் முன்னணியின் முடிவை எதிர்பார்த்து மக்கள் துன்பங்களை தாங்கிக்கொண்டு தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

அந்த நேரத்தில் மலையகம் மாத்திரம் ஸ்தம்பிக்கவில்லை. முழு நாடுமே பொருளாதார ரீதியிலான நெருக்கடியில் திகைத்துப் போயிருந்தபோது ஜனாதிபதி எம்மை நேரடியான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.

ஆகவேதான் சம்பள உயர்வுக்காக மட்டும் எமது முழு சக்தியையும் பயன்படுத்துவதைவிடவும் ஒட்டுமொத்தமான அரசியல் அந்தஸ்தினை பெறுவதற்காக மக்களின் ஆதரவைப் பயன்படுத்துவதே தேவையானதென தீர்மானித்து மலையக மக்கள் முன்னணி சில நிதானமான முடிவுகளை எடுத்தது.

தற்போது தமிழ் மக்களின் வெறுப்புக்கு உட்பட்ட ஒருவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தேகிப்பது போல சில சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

இந்த அவலத்துக்கு அவரை உள்ளாக்குவதற்குச் சில சக்திகள் முனைந்து செயற்படலாம். ஆனால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளைத் தெளிவுபடுத்துவதற்கு நாம் சில முயற்சிகளை எடுக்க வேண்டிய அரசியல் கட்டாயம் மலையக மக்கள் முன்னணிக்கு உள்ளது.மலையக தமிழ் மக்களின் பிரதான அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியிடம் இதைப்பற்றி பேசவேண்டிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொள்வது ஜனநாயக ரீதியில் அத்தியாவசியமாகவும் உள்ளது.

மலையகத்திற்கு விடிவுகாலம் தேவை. அதற்காக எம்மோடு கரம் சேர்ப்போரை நாம் அரவணைப்போம். அதனை உதாசீனப்படுத்துபவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கும் மக்களை தயார்படுத்துவோம்.

மலையக மக்களின் பிரச்சினைகளைப் போலவே வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் இன உணர்வோடும் உரிமையோடும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இந்தியாவின் பங்களிப்பினை யாருமே உதாசீனப்படுத்தவே முடியாது. இந்தியாவின் பங்களிப்போடு மாத்திரமே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும் என்பதனை நான் இலங்கையில் மட்டுமல்ல. இந்தியாவில் வைத்தும்கூட எல்லா அமைப்புகளிடமும் வலியுறுத்தியுள்ளேன். எமது இந்த முயற்சி வெற்றியளிப்பதற்கு எம்மால் இயன்றவரை செயல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றோ, தடை செய்யப்பட்ட அமைப்பென்றோ எவராவது குரல் எழுப்பினால் அதற்கு எதிரான நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருப்போம் என்பதனை இந்த மேதினத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

நாளுக்கு நாள் பலபேர் மரணித்து மறையலாம். ஆனால், சரித்திரம் மறையாது. அது சரியான திசையை நோக்கி நித்தம் பயணித்துக் கொண்டே இருக்கும். அந்த வரலாற்றை முன்கொண்டு செல்லப்போவது மலையக மக்கள் முன்னணியேயாகும்.

Email this page Your Opinion Print this page
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மணலாறு, மன்னார் மோதல்களில் 10 படையினர் பலி; 15 பேர் காயம்
கிழக்கு மாகாண பாடசாலைகள் 9 ஆம் திகதி மூடப்படும்
மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமனம்
அம்பாறையில் அதிகாலையில் கடும் தாக்குதல் ஐ.தே.க.வின் பிரதம அமைப்பாளர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று உயர் மட்டக்கூட்டம்
கிழக்குத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுதபாணியாக ஐ.தே.க. போட்டியிடுகிறது
மினுவாங்கொடை, இரத்மலானை சுற்றிவளைப்பில் 41 பேர் கைது
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்
தபால் திணைக்களத்திற்கு 300 மில்லியன் ரூபா நஷ்டம் அரசுக்கு பெரும் சுமையான விவகாரம்
1,70,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாததால் சந்தேகம்
எஸ்.பி.யை தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. யாக்க ஐ.தே.க.வினர் முயற்சி
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்பு
யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சிக்கல்லூரிக்கு புதிய கல்வியாண்டில் 200 மாணவர்கள் அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
தென்மராட்சிப் பகுதியில் நான்கு இடங்களில் காலபோகச் செய்கைக்கு படைத்தரப்பு அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
வவுனியா ஆஸ்பத்திரியில் 40 லட்சம் ரூபாசெலவில் மனநோய் சிகிச்சைப் பிரிவு
யுத்தத்தின் பின்னடைவை மூடி மறைக்கவே தமிழரைக் கைதுசெய்து அரசு பழிவாங்குகிறது
மடுவை புனித பிரதேசமாக்க அரசு முயன்றால் ஹெலஉறுமய அதனை கடுமையாக எதிர்க்கும்
குளியாப்பிட்டி கொழும்பு பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு வேண்டுகோள்
அகதிகள் முகாமில் இலங்கையர் தற்கொலை
சந்திவெளி வாகன விபத்தில் இரு இராணுவத்தினர் பலி
பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு 3 நாள் விஜயம்
மிகின் லங்காவின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக இடைநிறுத்தம்
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
மாரவில வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து அரசு விரிக்கும் மாய வலையில் சிக்காதிருப்போம்
மதகுருமார் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அமைச்சர்கள் இன்று மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வாக்கு கேட்கின்றனர்
தேர்தல் பிரசாரத்திற்கு அரச ஊடகங்களை ஐ.ம.சு.மு. துஷ்பிரயோகம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு
சம்மாந்துறையில் இன்று பிரசாரக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்கிறார்
தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்தனர்
மாகாண சபைத் தேர்தலில் அரச பிரதிநிதிகளை தெரிவு செய்தால் முரண்பாடற்ற நிர்வாகம் ஏற்படும்
உகண பிரதேச ஜே.வி.பி. ஆதரவாளர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொண்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளை கண்டன
பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் திட்டம்
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க ஹக்கீம் தயங்கார்
தமிழ் இனத்தின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு பிரபாகரன் பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் உதவி
இலங்கையில் வேலையற்றோரின் தொகை 4, 47,000 ஆக அதிகரிப்பு
கௌரவமான ஒரு சமூகமாக மலையக மக்கள் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும்
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
நவீன அணுகுமுறையினூடாக தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்
மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com