Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
* இறுதி நேரத்தில் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை

நடுக்கடலில் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர்பிழைக்க கடவுளை வேண்டி படகில் மொட்டை அடித்த பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபா தனுஷ்க் (வயது 28), அமர சந்தீர்வா (19 வயது) , நுவான் (20 வயது), சனத் தர்ஷன் (20 வயது ) மற்றும் ரூவான் பிரியந்த் (26 வயது) இவர்கள் அனைவரும் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து ஒரு சிறிய விசைப்படகில் இவர்கள் 5 பேரும் கடலில் மீன்பிடித்து வரப் புறப்பட்டார்கள். புறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், அவர்களால் படகை சரியாகச் செலுத்தி மீன்களைப் பிடிக்க முடியவில்லை.

சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு 3 நாட்கள் ஆகியும் அவர்களால் சிறிய அளவு மீன்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதனால், ஊர் திரும்ப முடிவு செய்தனர். இந்த நிலையில் தான் அவர்களுக்கு சோதனை ஏற்பட்டது. வங்கக்கடலில் நர்கீஸ் புயல் சின்னம் உருவானது. இதனால், அடித்த பலத்த காற்றில் அவர்களது படகில் இருந்த இயந்திரம் திடீரென கழன்று கடலுக்குள் விழுந்துவிட்டது. இதனால், படகு செயலிழந்து நடுக்கடலில் நின்றுவிட்டது.

கடலில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்ததால் படகு இப்படியும் அப்படியும் அசைந்து காற்றுப்போன போக்கில் திசை மாறிச் சென்று கொண்டிருந்தது.

இதனால், செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் செயற்கைக்கோள் உதவியுடன் செயற்படும் வயர்லஸ் கருவி இருந்தது. அதன் உதவியுடன் இலங்கையில் உள்ள மற்ற நண்பர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் உயிரைக் காப்பாற்ற ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி கெஞ்சினார்கள்.

இதைத் தொடர்ந்து இலங்கை பொலிஸுக்கும் இலங்கை அரசுக்கும் நண்பர்கள் தகவல் தெரிவித்தார்கள். இந்திய கடலோரக் காவல்படைக்கு இலங்கை அரசு தங்கள் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. இதற்குள் 4 நாட்கள் ஓடிவிட்டிருந்தது. அவர்களிடம் போதுமான உணவுப்பொருள் இருந்ததால் அதை வைத்து பசி பிரச்சினையை சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களது படகில் தண்ணீர் புக தொடங்கியது. இதனால், படகு மெல்ல, மெல்ல கடலில் மூழ்க ஆரம்பித்தது. இதனால், அவர்களுக்கு உயிர் பற்றிய பயம் ஏற்பட்டது. தங்களை எப்படியாவது உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள். அதுமட்டுமன்றி மூழ்கிக் கொண்டிருந்த படகிலேயே ஒருவர் மாறி ஒருவர் தங்களுக்குள் மொட்டை அடித்து பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

அவர்கள் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால், டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படையின் மீட்பு மற்றும் செயல்பாடுகள் பிரிவு, இலங்கை மீனவர்களை மீட்குமாறு கிழக்குக் கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, கிழக்கு கடலோரக் காவல்படையின் கப்டன் வேணு மாதவ் தலைமையிலான ஊழியர்கள் `கிட்டூர் சென்னம்மா' கப்பலில், இலங்கை மீனவர்களை தேடத் தொடங்கினார்கள். தீவிர தேடுதலுக்குப் பிறகு, சென்னையில் இருந்து 300 கி.மீ. கிழக்கே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கடலோரக் காவல்படையினர் கண்டுபிடித்தனர்.

அப்போது, மீனவர்களின் படகு தலைகீழாக கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக கயிறு வீசி, படகில் இருந்த 5 மீனவர்களையும் கடலோரக் காவல்படையினர் தங்கள் கப்பலுக்கு அழைத்து வந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களின் கண்ணெதிரிலேயே அந்த படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. இதனைப் பார்த்த மீனவர்கள், கடலோரக் காவல்படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.

பின்னர், சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை துறைமுகத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களிடம் கடலோரக் காவல்படை அதிகாரி கமாண்டன்ட் ராஜன் விசாரணை மேற்கொண்டார். அவர்களில் ஒருவர் மட்டும் தமிழில் பேசினார்.

அதன்பிறகு, சென்னை பொலிஸில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டார்கள். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில், அவர்கள் மீனவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், ஒருசில நாட்களில் அவர்கள் ஊர் திரும்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Email this page Your Opinion Print this page
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மணலாறு, மன்னார் மோதல்களில் 10 படையினர் பலி; 15 பேர் காயம்
கிழக்கு மாகாண பாடசாலைகள் 9 ஆம் திகதி மூடப்படும்
மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமனம்
அம்பாறையில் அதிகாலையில் கடும் தாக்குதல் ஐ.தே.க.வின் பிரதம அமைப்பாளர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று உயர் மட்டக்கூட்டம்
கிழக்குத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுதபாணியாக ஐ.தே.க. போட்டியிடுகிறது
மினுவாங்கொடை, இரத்மலானை சுற்றிவளைப்பில் 41 பேர் கைது
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்
தபால் திணைக்களத்திற்கு 300 மில்லியன் ரூபா நஷ்டம் அரசுக்கு பெரும் சுமையான விவகாரம்
1,70,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாததால் சந்தேகம்
எஸ்.பி.யை தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. யாக்க ஐ.தே.க.வினர் முயற்சி
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்பு
யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சிக்கல்லூரிக்கு புதிய கல்வியாண்டில் 200 மாணவர்கள் அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
தென்மராட்சிப் பகுதியில் நான்கு இடங்களில் காலபோகச் செய்கைக்கு படைத்தரப்பு அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
வவுனியா ஆஸ்பத்திரியில் 40 லட்சம் ரூபாசெலவில் மனநோய் சிகிச்சைப் பிரிவு
யுத்தத்தின் பின்னடைவை மூடி மறைக்கவே தமிழரைக் கைதுசெய்து அரசு பழிவாங்குகிறது
மடுவை புனித பிரதேசமாக்க அரசு முயன்றால் ஹெலஉறுமய அதனை கடுமையாக எதிர்க்கும்
குளியாப்பிட்டி கொழும்பு பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு வேண்டுகோள்
அகதிகள் முகாமில் இலங்கையர் தற்கொலை
சந்திவெளி வாகன விபத்தில் இரு இராணுவத்தினர் பலி
பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு 3 நாள் விஜயம்
மிகின் லங்காவின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக இடைநிறுத்தம்
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
மாரவில வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து அரசு விரிக்கும் மாய வலையில் சிக்காதிருப்போம்
மதகுருமார் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அமைச்சர்கள் இன்று மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வாக்கு கேட்கின்றனர்
தேர்தல் பிரசாரத்திற்கு அரச ஊடகங்களை ஐ.ம.சு.மு. துஷ்பிரயோகம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு
சம்மாந்துறையில் இன்று பிரசாரக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்கிறார்
தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்தனர்
மாகாண சபைத் தேர்தலில் அரச பிரதிநிதிகளை தெரிவு செய்தால் முரண்பாடற்ற நிர்வாகம் ஏற்படும்
உகண பிரதேச ஜே.வி.பி. ஆதரவாளர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொண்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளை கண்டன
பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் திட்டம்
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க ஹக்கீம் தயங்கார்
தமிழ் இனத்தின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு பிரபாகரன் பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் உதவி
இலங்கையில் வேலையற்றோரின் தொகை 4, 47,000 ஆக அதிகரிப்பு
கௌரவமான ஒரு சமூகமாக மலையக மக்கள் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும்
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
நவீன அணுகுமுறையினூடாக தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்
மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com