Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஹேவகே தெரிவிப்பு

தமிழர்கள் அனைவருமே புலிகளுக்கு ஆதரவாளர்கள் அல்ல என்று தெரிவித்துள்ள மத்திய, கிழக்கு பிராந்தியத்திற்கு பொலிஸ் பொறுப்பதிகாரியாக புதிதாக நியமனம் பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஹேவகே, பொதுமக்களின் உதவியுடன் நாட்டை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று இந்நாட்டில் யுத்தம் தேவையா? இல்லையா? என்பதைவிட ஒவ்வொரு குடிமகனும் தான் வாழும் கிராமத்தையும், கிராம மக்களையும் பாதுகாக்க வேண்டும்.

பொலிஸாரால் மாத்திரம் பாதுகாப்பு வழங்க முடியாது. கிராம மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நான் கடந்த 20 வருடம் வடக்கு, கிழக்கு பகுதியில் கடமை புரிந்துள்ளேன். அங்கு வாழும் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்ளாமையினாலே அங்கு மக்களிடையே பிரச்சினைகள் எழுந்தன.

ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் சிங்கள மொழியிலும் சிங்களவர்கள் தமிழ் மொழியிலும் உரையாடி தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பிரச்சினை இல்லாமல் ஒற்றுமையாக வாழுகின்றார்கள்.

ஆனால், வெளியிலிருந்து வரும் ஒரு சில சக்திகள் மூலம் மக்களிடையே பலபிரச்சினை ஏற்படுத்தவோ அல்லது பயங்கரவாதத்தை இங்கு கொண்டுவருவதற்கு முயற்சி செய்யலாம். அதற்கு இங்கு வாழும் மக்கள் துணை போகக்கூடாது.

இன்று பாடசாலைகளிலும் பஸ்களிலும் தொழிற்சாலைகளிலும் குண்டு வைத்து தகர்க்கின்றார்கள். இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

வெளியில் சென்று வீடு திரும்பும் வரை வீட்டிலுள்ளவர்கள் பெரும் பதற்றத்துடன் இருக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

ஒரு சில இடங்களில் குண்டு வெடித்ததுடன் அப்பகுதியிலுள்ள தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்றார்கள். இதனால் அம் மக்கள் துன்பப்படுகின்றார்கள். தமிழர்கள் எல்லோருமே புலிகளுக்கு உதவி செய்பவர்கள் அல்ல என நான் பொலிஸ் அதிகாரிக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.

இந்த பயங்கரவாத சூழ்நிலையால் கதிர்காமம், அநுராதபுரம், கண்டி தலதா மாளிகை போன்ற புனித ஸ்தலங்களுக்கு மக்கள் செல்வதில்லை. அதேபோல இம்முறை இங்கு நடந்த வசந்த கால நிகழ்வுகளிலும் பெருந்திரளானோர் கலந்து கொள்ளவில்லை.

எனவே மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. நமக்கு தேவையில்லையென பொதுமக்கள் நினைக்கக் கூடாது. பொது மக்களும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கினால் தான் நாட்டையும் வீட்டையும் மக்களையும் பாதுகாக்க முடியும். சந்தேகத்திற்கிடமானவர்கள் நடமாடினாலோ அல்லது சந்தேகமான பொதிகளை கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாநாகர சபை உறுப்பினர்களுக்கான டி.ஜி. மகிந்த குமார காமினி திஸாநாயக்க, திஸ்ஸ செனவிரட்ன, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காமினி மதுரட்ட, உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன்யடவர, நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி சூலணிவீரரட்ன ஆகியோருடன் கிராம சேவகர்களும் மக்கள் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com