Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
தொழிலாளர் விடுதலை முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து நானு ஓயா நகரில் நடத்திய மே தின நிகழ்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு. நமது நாட்டில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நாட்டையும் மக்களையும் ஆட்டிப்படைப்பது ஒரு தேசியப் பிரச்சினையாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்க இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்தும் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணத்தவறிவிட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பது மூலமாக இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காண முடியாது. ஆயுதப் போராட்டம் நடத்திய நாடுகள் உலக ரீதியாக கற்றுத்தந்த பாடமாகும். இனப்பிரச்சினை தீர்வில் தேசிய நலனை கொண்டுள்ள அரசாங்கத்திற்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது. அந்த வகையில் சகல மக்களும் சமத்துவமாக வாழக்கூடிய சமவுரிமையை வழங்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் சாசனமாக உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முன் வரவேண்டுமென்ற எமது ஆலோசனையை தீர்மானமாக முன்வைக்கின்றோம்.

தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழி மூலம் கருமமாற்றும் உரிமையை வழங்குதல் வேண்டும். நாட்டின் அரச கரும மொழியாக சிங்களமும் தமிழும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மொழி உரிமையை தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் அவை இன்றும் நிர்வாக மட்டத்திற்கு அமுல்படுத்தப்படவில்லை.

இதனால் தமிழ் பேசும் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத் திணைக்களங்களும், தஸ்தாவேஜுகளையும் சிங்கள மொழியிலேயே விநியோகிப்பதால் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய கருமங்களை சுயமாக செய்துகொள்ள முடியாது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

மொழி என்பது ஒரு மனிதனின் தாய் மொழி என்ற தத்துவத்தைக் கொண்டதாகும். நாட்டில் இன முரண்பாடு ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையும் முக்கியமான காரணியாகும்.

காலம் தாழ்த்தாது சகல அரசாங்கத் திணைக்களங்களிலும் தமிழ் மொழியை நிர்வாக மொழியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்து வருபவர்கள். பிரித்தானிய காலனித்துவ காலத்தில் நாட்கூலி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விஞ்ஞான யுகத்திலும் இந்த நாட்கூலி முறையிருப்பது காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. நாட்டில் அனைத்து தொழில் துறையிலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பள முறை அமுலில் இருக்கின்றது. மாதச் சம்பளத்தின் மூலமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

இந்த நாட்கூலி முறையில் அடிமைப்பட்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தேசிய தொழிலாளர்களின் தரத்திற்கு உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம் காலம் தாழ்த்தாது நாட்கூலி முறையை ஒழித்து மாதச் சம்பளம் வழங்கும் முறையினை பெருந்தோட்டத் தொழிலாளர்களை மதித்து வழங்கும் சம்பளக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

சர்வதேச மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக்க வேண்டும். நாட்டில் உழைக்கும் சகல பெண் தொழிலாளர்களுக்கும் சர்வதேச மகளிர் தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக்கப்பட்டிருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிற்துறையில் உழைக்கும் பெண்கள் இன்று வரை இந்த உரிமையை பெறவில்லை. சர்வதேச மகளிர் தினத்தில் தங்களுடைய உரிமையை இழந்து சம்பளம் இல்லாத விடுமுறையாகவே அனுஷ்டித்து வருகின்றனர்.

பெருந்தோட்டப் பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அமுல்படுத்த அரசாங்கம் ஏனைய தொழில்துறையில் உழைக்கும் பெண்கள் அனுபவிக்கும் உரிமையை பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தேசியப் பொருளாதாரத்தின் பங்காளியாக உழைக்கும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக வழங்க வேண்டும்.

பெருந்தோட்ட மருத்துவமனைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட மருத்துவமனை பிரித்தானிய காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட நிலையிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருவது இன்றைய காலத்தேவைக்கு பொருத்தமானதாக இல்லை. பெருந்தோட்ட மருத்துவமனையின் சேவையில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே தோட்டப்புற மருத்துவமனைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியது அவசியமானதாகும்.

பெருந்தோட்டப் பிரதேச ஆசிரியர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து மலையகத் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களாகப் பணிபுரிகின்ற இந்த ஆசிரியர் சமூகம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அவர்கள் கல்வி கற்று ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் தாய் தந்தையர் வசிக்கின்ற தோட்டக் குடியிருப்புகளில் வசிக்கின்ற நிலைமை இருக்கின்றது. இவை காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்காது. ஆசிரியர்கள் தனி மனிதன் அல்ல. அவர்கள் மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்கின்ற மாற்றம் ஏற்படும் போது தோட்டக்குடியிருப்புகளில் வாழ்வது பொருத்தமாக இருக்காது.

பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றவர்களுக்கு வீடமைப்பு அதிகார சபையின் மூலமாக அரசாங்கம் வீடமைப்புத் திட்டமொன்றை ஏற்படுத்தி அதனை அவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும்.

சம்பள முரண்பாடும் சம்பளப் பாக்கியும் ஆசிரியர்கள் நியமனத்தின் போது முரண்பாடும், ஏற்றத்தாழ்வும் உள்ள சம்பளம் வழங்கப்படுகின்றது. நீண்டகாலமாக இந்த ஆசிரியர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் இந்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படவில்லை.

ஒரே தொழில் செய்யும் ஆசிரியர்கள் சம்பளம் 2007 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தின் வழங்கப்படுகின்ற சம்பளத்திற்கும் ஏற்கனவே ஆசிரியராகப் பணிபுரிகின்ற ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் பாரிய முரண்பாடு இருக்கின்றது.

இந்த சம்பள முரண்பாட்டையும், சம்பளத்தில் வழங்க வேண்டிய மிகுதிச் சம்பளத்தையும் வழங்காமல் காலத்தைக் கடத்துவதால் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். சம்பளத்தில் உள்ள முரண்பாட்டை அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் சம்பள உயர்வை வழங்க வேண்டும். அதேபோன்று சம்பளத்தில் வழங்கப்படாமல் இருக்கும் பாக்கிச் சம்பளத்தையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்களை முன்வைத்துள்ளது.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com