Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* யாழ்.அரச அதிபர் கே.கணேஷ்

யாழ். குடாநாட்டு தீவுப் பகுதியில் குறிப்பாக நெடுந்தீவில் கடற்றொழிலாளர்கள் தாம் கடலில் பிடித்த கடலுணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் இதுவரை காலமும் எதிர்நோக்கிய பல்வேறு கஷ்டங்கள் 68 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு புதிதாக வழங்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகின் மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ். மாவட்ட மக்களுக்கு போதிய கடலுணவுப் பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இவ்வாறு யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை புங்குடுதீவு குறிகட்டுவான் இறங்குதுறையில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தால் வழங்கப்பட்ட குளிரூட்டிய மீன்பிடிப்படகை நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்க சமாஜப் பிரமுகர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கடல் நீரியல் மற்றும் கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ்.தர்மலிங்கம் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். கடற்படையினரால் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட இப்படகை, காரைநகர் கடற்படை கட்டளை அதிகாரி ஏ.சமணவீர யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். அரச அதிபர் இப்படகை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் என்.திருலிங்கநாதனிடம் கையளித்து படகிற்கான உரிமங்களை நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்திடம் வழங்கினார். இப்படகு பின் வெள்ளோட்டமாக முதலில் நயினாதீவு ஷ்ரீ நாகபூசணியம்மன் ஆலயத்துக்கும் பின்னர் நெடுத்தீவு, அனலைதீவு, எழுவைதீவு இறங்குதுறைகளுக்கும் பத்திரிகையாளர் ஒரு சிலருடனும் தனது வெள்ளோட்டத்தை நடத்தியது. இந்நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு குறிகட்டுவான் இறங்குதுறையில் சேவையில் இருந்த கடற்படை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

இவ்வைபவத்தில் யாழ். மாவட்ட அதிபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; "சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன. தீவுப் பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் தமது கடலில் பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்களை எடுத்துவந்து சந்தைப்படுத்துவதில் எதிர்கொண்ட பல கஷ்டங்கள் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் குளிரூட்டிப் படகு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில் நெடுந்தீவில் வாழும் 1,500க்கும் அதிகமான கடற்றொழிலாளர்களின் வருமான மேம்பாட்டுக்கு வளம் கிடைத்திருப்பதுடன், அவர்களது குடும்பத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்களின் நல்வாழ்வுக்கும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் வழி செய்து கொடுத்துள்ளது.

யாழ். மாவட்டத்துக்கு கடற் கலங்களை பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே எடுத்து வர முடியும். கடந்த வருடமே இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் இப்படகு வடிவமைக்கப்பட்டபோதும் இப்போது தான் அதனை எடுத்துவர முடிந்தது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கிடைக்கும் வசதிகள் அனைத்து கடற்றொழிலாளர்களும் பயனடையக் கூடியதாக நிர்வாகிகள் செயல்பட வேண்டும். குறிப்பாக, கடற்படையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே, உங்கள் வழமையான சேவைகள் அமைய வேண்டும்.

இப்படகில் சுமார் ஐந்து மெற்றிக் தொன் கடலுணவுப் பொருட்களை எடுத்துவர குளிரூட்டி கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாற்பதடி நீளமான இந்த பைபர் கிளாஸ் படகை உங்கள் சொத்தாகப் பயன்படுத்தி வாழ்வில் புதிய முன்னேற்ற இலக்கை எட்டுமாறு இம்மக்களை வாழ்த்துகின்றேன் என்றார்.

யாழ். மாவட்ட கடல் நீரியல் மற்றும் கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ்.தர்மலிங்கம் அங்கு உரையாற்றுகையில், சிறுவர் பாதுகாப்பு நிதியம் இன்று வழங்கும் குளிரூட்டியுடன் கூடிய படகு, நெடுந்தீவு பிராந்தியத்தின் கடற்றொழிலாளர்களின் சுபிட்சமான வாழ்வை வளப்படுத்த உதவும் பாரிய உதவியாகும். இப்பிரதேச கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக தாம் கடலில் பிடிக்கும் கடல் உணவுப் பொருட்களை பழுதடையாமல் நல்ல விலைக்கு சந்தைப்படுத்த முடியாமல் அவலங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையை மாற்றியமைக்க சிறுவர் நிதியம் எடுத்த முயற்சியின் பயனாக இப்பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் உருவாகியுள்ளதாகக் கூறினார்.

வைபவத்தில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு நிதிய முகாமையாளர் விக்ரர் மொசஸ், பிராந்திய இணைப்பாளர் எஸ்.மகேந்திரன், கடல் நீரியல் வள திட்ட அதிகாரி கலிங்ஸ்ரன், யாழ். மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இப்படகுச் சேவை தினமும் நெடுந்தீவு இறங்குதுறை, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு இறங்குதுறைகளுக்கு சென்று கடற்றொழிலாளர்களின் உணவுப் பொருட்களை எடுத்து வந்து குறிகட்டுவான் இறங்குதுறையில் ஒப்படைக்கும்.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com