Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* கட்டார் அறிஞர் தீன்முஹம்மத் அறிவுரை

முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பற்றி ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியைக்காட்ட முடியுமெனத் தெரிவித்திருக்கும் கட்டார் (ஷரீஆ) இஸ்லாமிய பல்கலைக்கழக உபவேந்தர் தீன்முஹம்மத், தரீக்காக்கள் முஸ்லிம் சமுகத்தை சீரான பாதையில் இட்டுச்செல்ல உருவாக்கப்பட்டனவேயொழிய சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்குடன் வரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

`திக்ர்' எனும் இறைபக்தி முஸ்லிம்களிடம் மேலோங்கினால் நாம் எதிர்கொண்டிருக்கும் அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உம்முஸ்ஸாவியாவில் நடைபெற்றுவரும் ஷாதுலியா தரீக்காவின் தேசிய மாநாட்டின் இரண்டாம் நிகழ்ச்சியில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு பேசுகையிலேயே உபவேந்தர் தீன்முஹம்மத் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

ஷாதுலியா தரீக்காவின் இஃவான்கள் எப்போதும் ஒழுக்கம், மரியாதை, பண்பாடுகளில் கரிசனையுடையவர்கள். அதனால் தான் அந்தத் தரீக்காவின் வளர்ச்சி மென்மேலும் வளர்ந்தோங்கி அனைத்து இளைஞர்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்காக நான் ஏனைய தரீக்காக்களை குறை கூறவில்லை. தரீக்காக்களுள் முதலிடத்தை ஷாதுலியா தரீக் வகித்துக் கொண்டிருக்கிறது. என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.

ஸூபியாக்கள், கலீபாக்கள் தரீக்காவின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டவர்கள் இறைநேசச் செல்வர்கள் எவ்வாறு இஸ்லாத்துக்குச் சேவை செய்தார்களோ அதனையே ஷாதுலியா கலீபாக்களும் அர்ப்பணிப்புடன் தீன்பணி செய்து வருகின்றனர்.

இங்கு நான் ஒருவிடயத்தை மீண்டும் கூற விரும்புகிறேன். தரீக்காக்கள் பல இருக்கின்றன. அவைகள் அனைத்தும் ஒற்றுமைப்படவேண்டும். தரீக்காக்களின் ஐக்கியமே தரீக் காக்களை சீர்குலைக்கத் திட்டமிடுவோருக்கு கொடுக்கப்படும் சாட்டை அடியாகும்.

நாங்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் இதனை தரீக்காக்கள் சிறப்புடன் செய்வதற்கு வழி காட்டுகின்றன.

தரீக்காக்கள் இல்லாது போனால் இஸ்லாமே இருக்காது. இதனைத் துணிந்து கூறலாம். இஸ்லாம் என்றால் என்ன? உண்மையான முஸ்லிம் என்பவன் யார்? அல்லா தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்பதை நினைத்து அவனை வணங்குவதாகும். நபிகள் நாயகம் (ஸல்) முன்னிலையில் அன்றைய நபித் தோழர்கள் எவ்வளவு பணிவாக பண்பாக இருந்தார்கள் என்பதை நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.

கந்தூரி மௌலூத் ஓதினாலும், பாத்திஹா ஓதினாலும் அங்கே அல்லாஹ்வின் திக்ரும் நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத்துமே சொல்லப்படுகிறது. நாயகத்தின் மீது ஸலவாத்துச் சொல்லாதவன் சுவர்க்கம் செல்லமாட்டான். அதேபோல் அல்லாஹ்வும் அவனை வெறுக்கின்றான். ஏனெனில் நபிகள் நாயகத்தின் மீது நானும் ஸலவாத்துச் சொல்கிறேன். மனிதர்களே நீங்களும் ஸலவாத்துச் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான் எனத் தெரிவித்தார்.

தமிழ் நாடு முஸ்லிம் லீக் உபதலைவர் கலாநிதி அப்ளல் ஹூஸைன் பேசும்போது கூறியதாவது;

நாங்கள் எமக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி கூறவேண்டும். அவ்வாறு செய்யாது போனால் நன்றி கெட்டவர்களாக மாறிவிடுவோம். அதேபோல் எம்மைப் படைத்துப் பராமரித்து எமக்கு உதவி புரியும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்காது போனால் எம்மைப் போல் துரதிர்ஷ்டம் பிடித்த மனிதர்கள் பாவிகள் இருக்கவே முடியாது.

இதனால் தான் எங்கள் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) இறைவனுக்கு `ஷுக்கூர்' என்ற நன்றியைத் தெரிவித்துக் கொண்டேயிருந்தார்கள். இறைவன் செய்யும் அருளுக்கு அவனுக்கு நன்றியறிதலுள்ளவனாக இருக்க வேண்டாமா என்று நபி பெருமானார்கள் அடிக்கடி கேட்பார்கள்.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com